கர்நாடகாவில் ரூ.1,400 கோடி முதலீட்டில் தொழிற்சாலை தொடங்கும் முத்தையா முரளிதரன்!
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஸ்பின்னரான முத்தையா முரளிதரன், கர்நாடக மாநிலத்தில் ரூ.1,400 கோடி முதலீட்டில் ‘முத்தையா பெவரேஜஸ் அண்ட் கன்பெக்ஷனரிஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கவுள்ளதாக கர்நாடகா தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஸ்பின்னரான முத்தையா முரளிதரன் கர்நாடக மாநிலத்தில் ரூ.1,400 கோடி முதலீட்டில் ‘முத்தையா பெவரேஜஸ் அண்ட் கன்பெக்ஷனரிஸ்’ என்ற நிறுவனத்தை தொடங்கவுள்ளதாக கர்நாடகா தொழில்துறை அமைச்சரும் லோக்சபா உறுப்பினருமான எம்.பி. பாட்டீல் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமையன்று இது தொடர்பாக முத்தையா முரளிதரனுடன் அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த உற்பத்தி ஆலைக்காக 46 ஏக்கர் நிலமும் ஏற்கெனவெ ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் பாட்டீல் தெரிவித்தார். சாமராஜ்நகரா மாவட்டத்தில் உள்ள படனக்குப்பேயில் இந்த குளிர்பான மற்றும் தின்பண்டங்கள் தொழிற்சாலை அமையவிருக்கிறது.
![Muttiah Muralitharan](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/murali-1718778471302.jpg?fm=png&auto=format&w=800)
இது தொடர்பாக அமைச்சர் தன் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,
"முத்தையா பெவரேஜஸ் அண்ட் கன்பெக்ஷனரீஸ் என்ற பிராண்டின் கீழ் பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனம் அமைக்கத் திட்டமிட்டுள்ளார் முத்தையா முரளிதரன் முதலில் ரூ.230 கோடி முதலீட்டில் தொடங்கவிருந்த இந்த நிறுவனத்தின் முதலீடு ரூ.1000 கோடியாகி தற்போது ரூ.1400 கோடி முதலீட்டில் தொடங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்திற்கு ஏற்கெனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு விட்டது. உற்பத்தி நடவடிக்கைகள் 2025-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று பதிவிடப்பட்டுள்ளார்.
இதோடு கூடுதலாக தார்வாட்டில் மேலும் ஒரு தயாரிப்புப் பிரிவையும் முத்தையா முரளிதரன் நிறுவத் திட்டமிட்டுள்ளதாக பாட்டீல் தெரிவித்தார்.
இது தொடர்பாக நடந்த சந்திப்பில் தொழிற்துறை மாநிலப் பிரிவின் முதன்மைச் செயலர் எஸ்.செல்வகுமார், தொழிற்துறை ஆணையர் குஞ்சன் கிருஷ்ணா, உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.