'1 கோடி விண்ணப்பம்' - வேலைக்குச் செல்ல அதிக ஆர்வம் காட்டும் 2ம், 3ம் கட்ட நகரப் பெண்கள்!
இந்தியாவில் உள்ள டயர் 2 மற்றும் டயர் 3 நகரங்களில் வசித்து வரும் சுமார் 1 கோடி பெண்கள் வேலைக்காக விண்ணப்பித்துள்ளதாக பிரபல வேலைவாய்ப்புத்தளமான Apna.co அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள டயர் 2 மற்றும் 3 நகரங்களில் வசித்து வரும் சுமார் ஒரு கோடி பெண்கள் வேலைக்காக விண்ணப்பித்துள்ளதாக பிரபல வேலைவாய்ப்புத்தளமான Apna.co அறிவித்துள்ளது.
தொழில்முறை நெட்வொர்க்கிங் மற்றும் வேலை வாய்ப்பு தளமான Apna.co அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டு, பெருநகரங்கள் அல்லாமல், டயர் 2 மற்றும் 3 நகரங்களில் பெண்களிடமிருந்து மட்டும் ஒரு கோடிக்கான வேலை வாய்ப்பு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன எனக்குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக அடுக்கு 2 மற்றும் மூன்றாம் நிலை நகரங்களைச் சேர்ந்த பெண்களிடம் இருந்து நிமிடத்திற்கு 100க்கும் மேற்பட்ட வேலை விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி,
2022 ஆம் ஆண்டில் அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களில் இருந்து 2.7 கோடி பேரிடமிருந்து வேலைக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் நிதி சுதந்திரத்திற்காக மட்டும் 87 லட்சம் பெண்கள் வேலைக்காக விண்ணப்பித்துள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த விண்ணப்பங்களில் சுமார் 80% அலுவலகம் சார்ந்த பணிகளுக்காக விண்ணப்பித்துள்ளனர். அதாவது, 80 சதவீத பெண்கள் நேரடியாக அலுவலகங்களுக்கு வந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில், வொர்க் ப்ரம் ஹோம் வாய்ப்புகள் அவர்களது கேரியர் வளர்ச்சியை குறைக்கக்கூடும் என கருதுகின்றனர்.
அப்னாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி நிர்மித் பரிக் கூறுகையில்,
“எங்கள் பணியாளர்களை மறுவடிவமைப்பதில் பெண்களின் தடுக்க முடியாத உயர்வை இந்த எழுச்சி பிரதிபலிக்கிறது. இந்த வேகம் வெறும் புள்ளிவிவரம் அல்ல; இது தொழில்முறை அரங்கில் பெண்கள் தங்கள் இடத்தைப் பெறுவதற்கான உரத்த அறிவிப்பு. நாம் முன்னோக்கிப் பார்க்கும்போது, இந்த அலையானது வேகத்தை அதிகரிக்கும், பல்வேறு துறைகளில் பெண்கள் பங்கை அதிகரித்து, ஒரு வலுவான எதிர்காலத்தை உருவாக்கும்,” என்றார்.
கூடுதலாக, பல்வேறு துறைகளில் நிதிச் சுதந்திரம் மற்றும் தொழில் முன்னேற்றம் ஆகியவற்றைக் கோரும் பெண்களின் வளர்ந்து வரும் போக்கையும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
“விற்பனை ஆதரவு, நிறுவன விற்பனை, விளம்பரம், ரியல் எஸ்டேட், பிராண்ட் மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் மின்வணிகம் ஆகியவற்றில் நிர்வாக வேலை வாய்ப்புகள் பத்து மடங்கு அதிகரித்துள்ளது.”
பெருநகரங்களுடன் ஒப்பிடும் போது அடுக்கு இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் 22 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சிறிய நகரங்களில் புதிய வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருவதும், சுமார் 60% வேலை வாய்ப்புகள் புதிய பணியாளர்களுக்கு (Fresher) வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.