அண்ணா பல்கலை ஆய்வு மையத்திற்கு ட்ரோன் நுட்பம் தொடர்பான காப்புரிமை!
சென்னை அண்ணா பல்கலையில் உள்ள ஏரோஸ்பேஸ் ஆய்வு மையம் (CASR), ட்ரோன் தொழில்நுட்பம் தொடர்பான காப்புரிமையை பெற்றுள்ளது. நிலத்தில் பொருட்கள் நிலை தொடர்பான நுட்பத்திற்கு இந்த காப்புரிமை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலையில் உள்ள ஏரோஸ்பேஸ் ஆய்வு மையம் (CASR), ட்ரோன் தொழில்நுட்பம் தொடர்பான காப்புரிமையை பெற்றுள்ளது. நிலத்தில் பொருட்கள் நிலை தொடர்பான நுட்பத்திற்கு இந்த காப்புரிமை அளிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த காப்புரிமை ட்ரோன் தொழில்நுட்பத்தில் முக்கிய மைல்கல்லாக அமைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர்.கே.செந்தில்குமார், டாக்டர்.எஸ்.தாமரைசெல்வி, டாக்டர்.சி.யு.ஹரி மற்றும் ஆய்வு மாணவர்கள் கலைசெல்வன், வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய ஆய்வுக்குழு இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
இந்த ஆய்வுக்குழு, ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான ஆய்வை, வழக்கமான மேப்பிங் மற்றும் கண்காணிப்பு சேவை கடந்து ட்ரோன்களை எப்படி பயன்படுத்தலாம் எனும் கேள்வியுடன் துவங்கியது.
இந்த கேள்வி அடிப்படையிலான ஆய்வு, தொலைவில் இருந்து நிகழ் நேரத்தில் பொருட்களை உணர்தல் மற்றும் வகைப்படுத்தல் தொடர்பான நுப்டத்தை கண்டறிய வைத்தது.
வழக்கமான ட்ரோன் காமிராக்களுக்கு மாறாக, இந்த அமைப்பு களத்தில் உள்ள கம்ப்யூட்டிங் திறனை, நிகழ் நேர பொருட்கள் உணர்தல் மற்றும் வகைப்படுத்தலுக்கு பயன்படுத்துகிறது. ஏஐ மற்றும் எம்.எல் நுட்பம் இதில் பயன்படுகிறது. இந்த நுட்பம் மேம்பட்ட அல்கோரிதம், முப்பரிமான மேட்ரிக்ஸ் மற்றும் ஏரியல் டிரயாங்குலேஷன் உள்ளிட்ட நுட்பங்களை பயன்படுத்துகிறது.
இந்த புதிய நுட்பம் பாதுகாப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்பாடு கொண்டது. பாதுகாப்புத்துறையில், இலக்கு தாக்குதல், பாதுகாப்பு நடவடிக்கைகள், ட்ரோன் தாக்குதல் உள்ளிட்டவற்றுக்கு பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிவிலியன் துறையில் தேடல், பேரிடர் உதவி, சோதனை ஆகியவற்றுக்கு பயன்படும்.
இந்த காப்புரிமை, ஏரோஸ்பேஸ் துறையில் மையத்தின் ஆய்வு ஈடுபாடுகளுக்கான வெற்றியாக அமைந்துள்ளது. 2001ம் ஆண்டு அமைக்கப்பட்ட மையம், ஆளில்லா வாகனங்கள் உள்ளிட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவிப் முதல் ரிமோட் பைலட் பயிற்சி மையமாகவும் விளங்குகிறது.
தமிழ்நாடு காவல்துறை, பெல் நிறுவனம், கேரளா ரிமோட் சென்சிங் சுற்றுச்சூழல் மையம், NRSC, ISRO உள்ளிட்ட அமைப்புகளுடன் இந்த மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
Edited by Induja Raghunathan