Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

1 ஆண்டில் Paytm Mall லாபம் ஈட்டும்: விஜய் சேகர் சர்மா நம்பிக்கை!

பேடிஎம் நிறுவனத்தின் இ-காமரஸ் பிரிவான Paytm Mall, இன்னும் ஒராண்டுக்குள் லாபமிட்டும் என எதிர்பார்ப்பதாக பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா கூறியுள்ளார்.

1 ஆண்டில் Paytm Mall லாபம் ஈட்டும்: விஜய் சேகர் சர்மா நம்பிக்கை!

Wednesday October 16, 2019 , 2 min Read

பேடிஎம் நிறுவனத்தின் இ-காமர்ஸ் பிரிவான Paytm Mall இன்னும் ஓராண்டுக்குள் லாபம் ஈட்டும் என Paytm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா தெரிவித்துள்ளார்.


இந்த நிதிச்சேவை நிறுவனம் ரொக்கத்தை உருவாக்கத்துவங்கும் நிலையில், 2021 க்கு பிறகு தான் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பேடிஎம்
"பேடிஎம் மால் வர்த்தகம் லாபம் ஈட்டும் நிலையை எட்டியுள்ளது. நாள் ஒன்றுக்கு 275,000-300,000 ஆர்டர்கள் வருகின்றன. பண்டிகை காலத்தில் இது இரு மடங்காகி, நாளுக்கு அரை மில்லியன் ஆர்டர்களை எட்டும்,” என்று இந்திய மொபைல் மாநாட்டின் போது விஜய் சேகர் சர்மா, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பேடிஎம் மாலில் மேலும் நிதி செலுத்தப்படுமா எனும் கேள்விக்கு, ”வங்கியில் பணம் இருக்கிறது. 260 மில்லியன் டாலர் இருக்கிறது. எனவே மேலும் வளர்ச்சி மூலதனம் அளிக்க முடியும். ஓராண்டில், நிறுவனம் நிச்சயமாக லாபம் ஈட்டத்துவங்கும்,” என அவர் தெரிவித்தார்.


கடந்த ஆண்டு பேடிஎம் மால், சாப்ட்பாங்க் இன்வெஸ்ட்மண்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் அலிபாபா.காம் (சிங்கப்பூர்) ஆகிய நிறுவனங்களிடம் இருந்து. 2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ரூ.2,900 கோடி நிதி திரட்டியது. இ-காமர்ஸ் துறையில் அமேசான், ஃபிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களுடன் பேடிஎம் மால் போட்டியிடுகிறது.


இந்த ஆண்டு துவக்கத்தில், அமெரிக்காவைச்சேர்ந்த இ-பே நிறுவனம், பேடிஎம் மாலில் 160 மில்லியன் டாலருக்கு 5.59 அளவிலான பங்குகளை வாங்கியது என, பேடிஎம் இ-காமர்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டு அமைப்பிடம் சமர்பித்துள்ள தகவல் தெரிவிக்கிறது. இதனையடுத்து பேடிஎம் மால், மூன்று சுற்றுகளில் 805 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது.


அலிபாபாவின் சிங்கப்பூர் நிறுவனம், பேடிஎம் மாலில் 30.15 சதவீத பங்குகள் மற்றும் சாப்ட்பாங்க் 21 சதவீத பங்குகள் கொண்டுள்ளன. 2018 மார்ச் மாதம் முடிந்த ஆண்டில், பேடிஎம் மால், ரூ.774.8 கோடி மொத்த விற்பனையில், ரூ.1.787 கோடி நிகர நஷ்டம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“2021 க்கு பிறகு தான் பங்கு வெளியீடு திட்டமிட்டுள்ளோம். பங்கு வெளியீட்டிற்கு முதலில் ரொக்கம் உருவாக்கத்துவங்க வேண்டும் எனக் கூறி வருகிறேன்,” என விஜய் சேகர் சர்மா பங்கு வெளியீடு திட்டம் பற்றி கூறியுள்ளார்.

பேடிஎம் நிறுவன நஷ்டம், 2018-19 காலத்தில், முந்தைய ஆண்டைவிட, மும்மடங்காக, ரூ.4,217 கோடியாக உயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


செய்தி : பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்