செப்டம்பர் 1 முதல் Phonepe, Paytm, Google pay, பயன்படுத்துவதில் சிக்கலா?
பேடிஎம், போன் பே, கூகுள் பே உள்ளிட்ட பணபரிமாற்ற செயலிகளை செப்டம்பர் 1ம் தேதிக்குப் பிறகு செயல்படுத்த முடியாத நிலை ஏற்படலாம். தொடர் சேவையை பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
வங்கிக்கு சென்று வரிசையில் காத்திருந்து செக் டெபாசிட், டிடி எடுப்பது உள்ளிட்ட கடினமான வேலைகளையும் ஆன்லைன் பரிவர்த்தனை எளிமையாக்கியது. வங்கிப் பணப்பரிவர்த்தனை போன்ற சேவைகளை அளிக்கும் செயலிகளான பேடிஎம், போன் பே, அமேசான் பே, கூகுள் பே உள்ளிட்டவை ஒருபடி மேலே போய் வாடிக்கையாளரின் வசதிக்கு ஏற்ப நினைத்த நேரத்தில் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியை அளிக்கின்றன.
ஆனால் இந்த செயலிகளை செப்டம்பர் 1ம் தேதிக்குப் பிறகு பயன்படுத்த வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கீழே பார்க்கலாம்.
மொபைல் வேலட் செயலிகள் வாடிக்கையாளர்களின் கேஒய்சி( KYC)யை அவர்களது கணக்குடன் இணைப்பதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது. பிப்ரவரி 2019ம் தேதிக்குள் இதனை செய்ய நிறுவனங்களை ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது. கேஒய்சி இணைக்காத பட்சத்தில் மத்திய வங்கி இந்த மொபைல் செயலிகளின் சேவை முடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பிப்ரவரி மாதத்தில் 70 முதல் 80 சதவிகித வாடிக்கையாளர்கள் கேஒய்சி இணக்க விதிமுறைகளுக்கு இணங்கவில்லை. இந்நிலையில் வேலட் நிறுவனங்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ரிசர்வ் வங்கியிடம் அவகாசத்தை ஆகஸ்ட் 31ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு செய்தது.
ரிசர்வ் வங்கி கொடுத்த கால அவகாசம் இன்றுடன் முடிகிறது. கூகுள் பே, பேடிஎம் மற்றும் அமேசான் பே உள்ளிட்ட மொபைல் வேலட்டுகளை நீங்கள் பயன்படுத்தும் நபர்களாக இருந்தால் அந்த சேவையை தொடர்ந்து பெற இதனை செய்தால் மட்டுமே நாளை முதல் தொடர்ந்து பணப்பரிவர்த்தனையை செய்ய முடியும்.
ப்ரீபெய்ட் வேலட் நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அளித்துள்ள உத்தரவில் ஆதார் எண்ணை வாடிக்கையாளர்கள் கட்டாயமாக தங்களது கணக்குடன் இணைக்க வேண்டும். டிஜிட்டர் வேலட்டுடன் ஆதார் இணைக்கப்படும் போது வாடிக்கையாளரின் பணப் பரிவர்த்தனையில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்ய முடியும் என்று ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை பிறப்பித்தது. ஆன்லைன் பணமோசடிகளை தவிர்த்து வாடிக்கையாளருக்கு முழு பண பாதுகாப்பு உத்தரவு அளிப்பதற்காக இந்த நடவடிக்கையானது கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பேடிஎம் கணக்குடன் Kyc இணைப்பது எப்படி?
· Paytm செயலியில் உள்நுழைக
· Nearby என்ற பொத்தானை அழுத்தவும்
· Upgrade account என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்
· உங்கள் பகுதியை தேர்வு செய்து அந்த மையத்தில் நேரில் சென்று கேஒய்சியை பதிவு செய்யவும்
· பயனாளர்கள் தங்களது ஆதார் அட்டை மற்றும் பான் அட்டையை சான்றாக கொண்டு செல்ல வேண்டும்.
இதேப்போல் நீங்கள் பயன்படுத்தும் பணப்பரிவர்த்தனை செயலியில் குறிப்பிட்டுள்ள முறையில் KYC-யை உடனடியாக செய்து தொடர்ந்து பயனபடுத்துங்கள்!