Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

அரசியல்வாதிகளின் தனி விமானம், ஹெலிகாப்டர்கள் தேவை அதிகரிப்பு: கல்லா கட்டும் ஆபரேட்டர்கள்!

மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் நாடு முழுவதும் பிரச்சாரங்களுக்கு அலைந்து கொண்டிருப்பதால், தனி விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கான தேவை 40% வரை உயர்ந்துள்ளது

அரசியல்வாதிகளின் தனி விமானம், ஹெலிகாப்டர்கள் தேவை அதிகரிப்பு: கல்லா கட்டும் ஆபரேட்டர்கள்!

Tuesday April 16, 2024 , 2 min Read

மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் நாடு முழுவதும் பிரச்சாரங்களுக்கு அலைந்து கொண்டிருப்பதால், தனி விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கான தேவை 40% வரை உயர்ந்துள்ளது, இதனால் ஆபரேட்டர்கள் 15% முதல் 20% வரை அதிக வருவாய் ஈட்டுவார்கள் என்று தொழில் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இதோடு, தனி விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுப்பதும் அதிகரித்துள்ளதால் வாடகைக் கட்டணமும் உயர்ந்துள்ளது. ஒரு விமானத்திற்கு ரூ.4.5 முதல் 5.25 லட்சமும், இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டருக்கு ரூ.1.5-1.7 லட்சமும் வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்தத் துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.

"ஹெலிகாப்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இது சாதாரண காலத்தை விட தேர்தல் காலத்தில் 25% அதிகமாக உள்ளது. தேவையுடன் ஒப்பிடுகையில் சப்ளை குறைவாக உள்ளது," என்று ரோட்டரி விங் சொசைட்டி ஆஃப் இந்தியா (RWSI) தலைவர் (மேற்கு மண்டலம்) கேப்டன் உதய் கெல்லி பிடிஐ செய்தி ஏஜென்சியிடம் தெரிவித்தார்.

பொதுவாக, அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள் குறைந்த நேரத்தில், குறிப்பாக தொலைதூர பகுதிகளை அடைய ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவது வழக்கம் தான். உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற பெரிய மாநிலங்களில் ஹெலிகாப்டர்களின் பயன்பாடு அதிகமாகக் காணப்படுகிறது என்றார் கெல்லி.

chartered flights

பிசினஸ் ஏர்கிராஃப்ட் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் (பிஏஓஏ) நிர்வாக இயக்குநர் கேப்டன் ஆர் கே பாலி பிடிஐயிடம் கூறுகையில், முந்தைய பொதுத் தேர்தல்களை ஒப்பிடுகையில், இந்த முறை தனிவிமானங்களுக்கான தேவை 30-40% அதிகமாக உள்ளது. விமானங்களுக்கான முன்பதிவுகள் செய்யப்படுகின்றன.

ஹெலிகாப்டர்களைப் பொறுத்தவரை, பொதுவாக, ஒற்றை எஞ்சின் ஹெலிகாப்டர்களுக்கு ஒரு மணிநேர கட்டணம் ரூ.80,000 முதல் 90,000 வரை இருக்கும், அது இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர்களுக்கு ரூ. 1.5 முதல் 1.7 லட்சம் வரை இருக்கும்.

"தேர்தல் நேரத்தில், ஒற்றை இன்ஜின் ஹெலிகாப்டர்களுக்கு ரூ.1.5 லட்சம் வரையும், இரட்டை இன்ஜின் ஹெலிகாப்டர்களுக்கு ரூ.3.5 லட்சம் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன," என்கிறார் உதய் கெல்லி.

தனி விமானங்களுக்கான கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.4.5 லட்சம் முதல் ரூ.5.25 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆளும் பாஜக, விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களுக்காக மொத்தம் ரூ.250 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது என்று தேர்தல் ஆணையத்திடம் 2019-20 ஆண்டுக்கான தணிக்கைச் செய்யப்பட்ட கணக்குகள் தெரிவிக்கின்றன. இதே காலக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சி இதற்காகச் செலவிட்ட தொகை ரூ.126 கோடி.