Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

இந்திய இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் மோடியின் மேற்கோள்கள்!

இளைஞர்களின் ஆற்றல் மற்றும் அவர்களால் எப்படி மாற்றத்தை கொண்டு வர முடியும் என பிரதமர் நரேந்திர மோடியின் ஊக்கம் தரும் மேற்கோள்கள் உணர்த்துகின்றன.

இந்திய இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் மோடியின் மேற்கோள்கள்!

Wednesday September 04, 2019 , 2 min Read

இந்தியா இளம் தேசம். 2020ல், இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 34.33 சதவீதமாக இருக்கும்.


பிரதமர் நரேந்திர மோடி, 2018ல் கர்நாடகாவில் இளைஞர்கள் மத்தியில் பேசும் போது, இளைஞர்களின் ஆற்றல் பற்றி குறிப்பிட்டார். அதன் பிறகும், பிரதமர் தொடர்ந்து இளைஞர்கள் ஆற்றல் பற்றியும், உலகை மாற்றுவதற்கான வாய்ப்பு பற்றியும் வலியுறுத்தி வருகிறார். தொழில்நுட்ப ஆற்றல் மூலம் தொழில்முனைவோராகி வேலைவாய்ப்பை உருவாக்குபவர்கள் என்பது முதல், நாட்டின் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கை அவர் வலியுறுத்தி வருகிறார்.


இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ள மற்றும் அவர்கள் எண்ணங்கள், தொழில்முனைவு ஆற்றலை நாம் ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதையும் உணர்த்தும் பிரதமர் நரேந்திர மோடியின் மேற்கோள்கள் சில:

மோடி மொழி
“இளைஞர்கள், உள்ளூர் மற்றும் தேசிய அளவிலான பிரச்சனைகளில் கவனம் செலுத்தி, அவற்றை புதுமையாக்கம் மற்றும் தொழில்நுட்பம் மூலம் தீர்வு காண்பதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. இது தான் ஸ்டார்ட் அப் துறையின் வெற்றி.”
"இந்திய இளைஞர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அற்புதமானவற்றை செய்து வருகின்றனர். சுய நம்பிக்கை நிறைந்த இளைஞர் சக்தி, பெரிய அளவில் யோசிக்கும் திறன் படைத்தது மற்றும் கனவுகளை அடைய கடினமாக உழைக்கக் கூடியது என நம்புகிறேன்.
“கடின உழைப்பு ஒரு போதும் களைப்பை உண்டாக்குவதில்லை. அது திருப்தியை அளிக்கிறது.”
”இன்று, இந்திய இளைஞர்களுக்கு பலவிதமான வாய்ப்புகள் உள்ளன, இத்தகைய வாய்ப்பு நமக்கு இருந்ததில்லை. இந்திய இளைஞர்கள் தங்களை நோக்கி வரும் இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புகிறேன்.”
”எளிய வார்த்தைகளில் சொல்வது என்றால், உங்கள் மீது நம்பிக்கை வைத்து, வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையுன் அனுபவியுங்கள். சமூகத்தின் எந்த நெருக்கடிக்கும் தலை வணங்க வேண்டாம்.”
”எந்த விதமான வரம்புகளாலும் கட்டுப்படுத்தப்படாத இளம் இந்தியாவை நான் கனவு காண்கிறேன். நம்பிக்கை மற்றும் வாய்ப்புகளால் நிறைந்த வாழ்க்கையை நாட்டின் இளைஞர்கள் வாழ வேண்டும் என விரும்புகிறேன்.”
”ஒரு ஐடியாவை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு ஐடியாவை உங்கள் வாழ்க்கையாக்கிக் கொண்டு, அந்த ஐடியாவை மையமாகக் கொண்டு வாழுங்கள். மூளை, தசைகள், நரம்புகள் மற்றும் உடலில் ஒவ்வொரு பகுதியிலும் அந்த ஒரு ஐடியா ஆதிக்கம் செலுத்தட்டும். மற்ற ஐடியாக்களை விட்டுவிடுங்கள், இது தான் வெற்றிக்கான வழி.”
”நாம் ஒன்றாக நடைபோட்டு, நாம் ஒன்றாக செயல்பட்டு, நாம் ஒன்றாக சிந்தித்து, நாம் ஒன்றாக உறுதியுடன் இருந்தால், நாம் இந்த தேசத்தை முன்னோக்கி அழைத்துச்செல்லலாம்.”
மோடி
”நம்மைப் போன்ற இளம் தேசம், மொத்த உலகின் மீதும் தாக்கம் செலுத்த வேண்டும்.”

இந்த மேற்கோள்கள் உங்களுக்கு எப்படி ஊக்கம் அளிக்கின்றன எனச் சொல்லுங்கள். உங்கள் கனவுகளை எப்படி நினைவாக்குகிறீர்கள். பின்னூட்டம் பகுதியில் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.


ஆங்கில கட்டுரையாளர்: தன்வி துபே | தமிழில்: சைபர்சிம்மன்