ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி; தோளில் சுமந்து உயிரைக் காப்பாற்றிய ரயில்வே காவலர்!
மத்திய பிரதேச நெகிழ்ச்சி!
மத்தியப் பிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு, ரயிலில் இருந்து விழுந்த காயமடைந்த ஒருவரை தோளில் சுமந்து கொண்டு, ஹோஷங்காபாத் மாவட்டத்தில் ரயில் தடங்களில் ஒரு கிலோமீட்டருக்கு மேல் ஓடி, அவருக்கு ஆரம்ப மருத்துவ சிகிச்சை அளிக்க உதவி புரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் உள்ள பக்தல் ரயில்வே நிலையம் அருகே நகரும் ரயிலில் இருந்து ஒரு பயணி விழுந்ததைப் பற்றி மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. அந்த அழைப்பின் பேரில் முதல் உதவி அளிக்கும் வாகனத்துடன் போலீஸார் சம்பவ இடத்துக்கு புறப்பட்டனர். ஆனால், மலைப்பாங்கான நிலப்பரப்பு காரணமாக போலீஸ் வாகனம் மூலம் சம்பவ இடத்தை அடைய முடியவில்லை.
வாகனம் வரமுடியாவிட்டாலும், காவலர் பூனம்சந்த் பில்லூர் என்பவர் வாகனத்தின் டிரைவர் ராகுல் சல்கல்லேவுடன், போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கி கால்நடையாக சம்பவ இடத்தை அடைந்தார். அங்கு 20 வயதை கொண்ட அஜித் என்ற பயணி, கை, கால்களில் காயத்துடன் மிகவும் வேதனையில் இருந்தார். வாகனம் இல்லாததை உணர்ந்த காவலர் பூனம்சந்த் பில்லூர், தன் தோளில் அவரை சுமந்து சென்றார்.
”காயமடைந்த நபர் இரத்தப்போக்கு மற்றும் வேதனையில் இருந்தார். அவரை தோள்களில் சுமப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஒரு கட்டத்தில், ஒரு ரயில் கடந்து செல்வதால் நான் பாதையில் இருந்து இறங்க வேண்டியிருந்தது.”
அவர் வேதனையில் இருந்தார், ஆனால் பேச முடிந்தது. நான் செய்த முதல் விஷயம், அவரிடமிருந்து தொலைபேசி எண்ணைப் பெற்று அவரது குடும்ப உறுப்பினர்களுக்குத் தெரிவிப்பதாகும்,” என்று பில்லர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.
இடையில், அவருக்கு சகாலே உதவினார், ஆனால் பில்லூர், ஒரு உடற்பயிற்சி ஆர்வலர் என்பவர் வெகுநேரம் காயமடைந்த பயணியை தன் தோளிலேயே அருகிலுள்ள ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.
பின்னர் அங்கு முதலுதவி கொடுத்துவிட்டு மால்வாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், பின்னர் ஹோஷங்காபாத்தில் உள்ள நர்மதா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார், அங்கு அவரது உடல்நிலை பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த பில்லூர், 2012ல் மத்திய போலீஸ் படையில் சேர்ந்தார். தற்போது அவரின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தகவல் உதவி: indianexpress | தமிழில்: மலையரசு