RCB-யின் உயரிய சேவை - பெங்களூரு தண்ணீர்ப் பற்றாக்குறையைப் போக்க ஏரிகளை மறுசீரமைக்கும் ராயல் சாலஞ்சர்ஸ் அணி!
ஐபிஎல் உரிமையாளரான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பசுமைத் திட்ட முன்முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு மாதங்களாக பெங்களூருவில் நிலவும் தண்ணீர் கடுமையான நெருக்கடியைத் தீர்க்கும் முயற்சிகளுக்கு அந்த அணி தங்களது பங்களிப்பை அளித்து பெங்களூரு மக்களுக்கு கைங்கரியம் ஆற்றியுள்ளது.
ஐபிஎல் உரிமையாளரான `ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு` அணியின் பசுமைத் திட்ட முன்முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு மாதங்களாக பெங்களூருவில் நிலவும் தண்ணீர் கடுமையான நெருக்கடியைத் தீர்க்கும் முயற்சிகளுக்கு அந்த அணி தங்களது பங்களிப்பை அளித்து பெங்களூரு மக்களுக்கு கைங்கரியம் ஆற்றியுள்ளது.
அதாவது, அந்த நகரின் மூன்று ஏரிகளை மீட்டமைத்துத் தந்து பெங்களூருவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சத்திற்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்துள்ளது. நீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் அமைந்துள்ள ஏரியை தூர்வாரி, மேம்படுத்துவது இந்த திட்டத்தின் பிரதான நோக்கம். ஆர்சிபி அணியின் பசுமையாக்க திட்டத்தின் முன்மாதிரி முயற்சியின் ஒரு பகுதியாக இது முன்னெடுக்கப்பட்டது.
இந்தியா கேர்ஸ் அறக்கட்டளையின் அறிக்கையின் படி, இட்கல்புரா ஏரி மற்றும் சடேனஹள்ளி ஏரியின் மறுசீரமைப்புப் பணிகளை முடித்தது, அதே நேரத்தில் கண்ணூர் ஏரிக்கு குடிமை வசதிகளைச் சேர்த்தளித்துள்ளது.
இந்த அறிக்கையின் படி,
இட்டகல்புரா ஏரி மற்றும் சடேனஹள்ளி ஏரிகளில் 1.20 லட்சம் டன் வண்டல் மற்றும் மணல் அகற்றப்பட்டுள்ளது. ஏரிகளின் குறுக்கே அணைகள் மற்றும் பாதைகளை உருவாக்க இந்த மண் பயன்படுத்தப்பட்டுள்ளது மற்றும் 52 விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு மேல் மண்ணாகவும் பயன்படுத்தியுள்ளனர். இந்த வேலைப்பாடுகளை அடுத்து இந்த ஏரிகளின் நீர் தாங்கு திறன் 17 ஏக்கர்களாக அதிகரித்துள்ளது.
கண்ணூர் ஏரியைச் சுற்றி, பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், இன மருத்துவ தாவர பூங்காக்கள், மூங்கில் பூங்காக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஆர்சிபி அணியின் தலைமை நிர்வாகி ராஜேஷ் மேனன் கூறும்போது,
“பெங்களூருவில் உள்ள முக்கிய ஏரிகளை மறுசீரமைப்பதன் மூலம் எங்கள் உள்ளூர் சமூகத்தை ஆதரிப்பதில் இயற்கையாகவே எங்கள் கவனத்தை விரிவுபடுத்தினோம். இந்த ஏரிகள் பக்கத்து கிராமங்களுக்கு முக்கியமான நிலத்தடி நீர் ஆதாரங்களாக மட்டுமல்லாமல் உள்ளூர் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பாகவும் உள்ளவை,” என்றார்.
ஒரு ஐபிஎல் அணி லாப நோக்கத்தை மட்டும் கொள்ளாது தன் பகுதி மக்களுக்கு இத்தகைய அத்தியாவசிய சேவைகளை செய்ய முன் வந்துள்ளது பெரிய அளவிலான பாராட்டுதல்களை ஈர்த்துள்ளன.