Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

MSME துறைக்கான உடனடி கடன் திட்டத்தின் கீழ் கடன் வரம்பை அதிகரிக்க SBI திட்டம்!

MSME Sahaj - என்ட் டு என்ட் டிஜிட்டல் இன்வாய்ஸ் ஃபைனான்சிங்', கடனுக்கு விண்ணப்பிப்பது, ஆவணங்கள் மற்றும் அனுமதியளிக்கப்பட்ட கடனை 15 நிமிடங்களுக்குள் எந்த மனித செய்முறைத் தலையீடும் இல்லாமல் வழங்குவது வரையிலான தீர்வுகளை வழங்குகிறது.

MSME துறைக்கான உடனடி கடன் திட்டத்தின் கீழ் கடன் வரம்பை அதிகரிக்க SBI திட்டம்!

Monday October 14, 2024 , 2 min Read

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறைக்கான போதிய கடன் வசதி கிடைக்க பாரத ஸ்டேட் வங்கி (SBI) உடனடி கடன் திட்டத்தின் கீழ் தற்போதுள்ள ரூ.5 கோடியில் இருந்து வரம்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

MSME Sahaj - என்ட் டு என்ட் டிஜிட்டல் இன்வாய்ஸ் ஃபைனான்சிங்', கடனுக்கு விண்ணப்பிப்பது, ஆவணங்கள் மற்றும் அனுமதியளிக்கப்பட்ட கடனை 15 நிமிடங்களுக்குள் எந்த மனித செய்முறைத் தலையீடும் இல்லாமல் வழங்குவது வரையிலான தீர்வுகளை வழங்குகிறது.

SBI

இது தொடர்பாக பேசிய பாரத ஸ்டேட் வங்கியின் சேர்மன் சி.எஸ்.ஷெட்டி,

“கடந்த ஆண்டு, நாங்கள் ஒரு வணிக விதியை உருவாக்கியுள்ளோம் அதன்படி, ரூ.5 கோடி வரையிலான கடன்களுக்கு தரவு அடிப்படையிலான மதிப்பீட்டை இயந்திரத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்கள் எம்எஸ்எம்இ கிளைக்குள் செல்லும் எவரும் தங்களது PAN எண்ணையும், ஜிஎஸ்டி தரவை பெறுவதற்கான ஒப்புதலையும் மட்டுமே வழங்க வேண்டும், நாங்கள் 15-45 நிமிடங்களில் கடனுக்கான ஒப்புதலை வழங்குவோம், என்றார்.

இது பிணையத்தின் தேவையை குறைக்கிறது, இது நிறைய பேர் முறையான MSME கடன் முறைக்கு வருவதற்கு உதவும். எங்களிடம் இன்னும் ஏராளமான MSME வாடிக்கையாளர்கள் முறைசாரா கடனுக்காக அணுகுகின்றனர். அவர்களை வங்கித் திட்டத்திற்குள் கொண்டு வர விரும்புகிறோம். நெட்வொர்க் விரிவாக்கத்தைப் பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 600 கிளைகளைத் திறக்க எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது.

நாங்கள் சுமார் 50 கோடி வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்கிறோம், மேலும் ஒவ்வொரு இந்தியருக்கும், மேலும் முக்கியமாக, ஒவ்வொரு இந்திய குடும்பத்திற்கும் நாங்கள் வங்கியாளர் என்று சொல்வதில் பெருமை அடைகிறோம்.

பங்குதாரரின் பார்வையில் மட்டுமல்ல, கடனளிப்பவருடன் ஒவ்வொரு பங்குதாரருக்கும் SBI சிறந்த மதிப்புமிக்க வங்கியாக மாற்ற முயற்சிக்கும். எமது வாடிக்கையாளர்களாக இருக்கலாம், எமது பங்குதாரர்களாக இருக்கலாம், பெரிய பொருளாதாரச் சூழல் அமைப்பாக இருக்கலாம்-சமூகம், நிறுவன கட்டமைப்பாக இருக்கலாம் - பங்குதாரர்கள் அனைவரும் எங்களை சிறந்த வங்கி என்று கூற வேண்டும்,” என்றார்.

பரந்துபட்ட கிளைகளின் நெட்வொர்க் தவிர, 65,000 ஏடிஎம்கள் மற்றும் 85,000 வணிக நிருபர்கள் மூலம் எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களை சென்றடைவது குறிப்பிடத்தக்கது.

தகவல் உதவி: பிடிஐ