‘இந்த வெற்றியை என் அம்மாவுக்கு சமர்ப்பனம் செய்கிறேன்’ - குத்துச் சண்டை வீராங்கனை சிம்ரஜித்!
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர், 60 கி எடைப் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
ஆசிய ஓசியானா ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியது மூலம் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர் 60 கிலோ எடைப்பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இந்த வெற்றியை தனது தாய்க்கு சமர்பனம் செய்வதாக சிம்ரன்ஜித் கவுர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சிம்ரன்ஜித் கவுர், ஒலிம்பிக் தகுதிச் சுற்று போட்டியில் மங்கோலிய வீராங்கனை நமூன் மோங்கரை 5-0 என வீழ்த்தினார். இதன் மூலம் அவர் அரையிறுதிக்கு முன்னேறியதோடு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றதை அடுத்து, சிம்ரன்ஜித் கவுர் இந்த வெற்றியை தனது தாய்க்கு சமர்பிப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். இது இந்தியாவுக்கான வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த போட்டிக்கு முன் மிகுந்த நெருக்கடியில் இருந்தேன். எதிர்த்து போட்டியிட்டவர் இரண்டாம் நிலை வீராங்கனை. போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. எனவே துவக்கம் முதல் என்னுடைய 100 சதவீத முயற்சியை வெளிப்படுத்தினேன்,” என்று சிம்ரன்ஜித் கவுர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
“எனவே நான் ஒரு உத்தியுடன் தான் சண்டையிட்டேன். இப்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன். இந்த வெற்றியை பல நாட்களாக தூங்காமல் இருந்த என் அம்மாவுக்கு சமர்ப்பனம் செய்கிறேன். இது இந்தியாவுகான வெற்றி...” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் அடுத்ததாக நடைபெறும் அரையிறுதியில் சிம்ரன்ஜித் கவுர் தைவான் வீராங்கனை ஹை யி வூவுடன் மோதுகிறார்.
செய்தி: ஏ.என்.ஐ | தமிழில்: சைபர்சிம்மன்