'ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்கு மூலதனத்திற்கு பஞ்சம் இல்லை; ஆனால், சரியான கதவுகளைத் தட்ட வேண்டும்' - Refex அருண் ஜெயின் கருத்து!
ஸ்டார்ட்அப் நிறுவனர்களை தங்கள் வணிகத்திற்காக யாரிடமிருந்தும் மூலதனம் கேட்பதில் அவர்களுக்கு உள்ள மனத்தடைகளை நீக்குமாறு ரெஃபெக்ஸ் எம்.டி.யும் சேர்மனுமான அனில் ஜெயின் கூறினார்.
தற்போதைய கடினமான காலங்களிலும் கூட ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்கு மூலதனத்திற்கு பஞ்சம் இல்லை; ஆனால், சரியான மூலதனக்கதவுகளை தட்ட வேண்டும் என்று சென்னயில் யுவர்ஸ்டோரி நடத்திய 'TamilNadu Story' விழாவில் Refex குழுமத்தின் சேர்மனும் நிர்வாக இயக்குநருமான அனில் ஜெயின் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட்அப் நிறுவனர்களை தங்கள் வணிகத்திற்காக யாரிடமிருந்தும் மூலதனம் கேட்பதில் அவர்களுக்கு உள்ள மனத்தடைகளை நீக்குமாறு அனில் ஜெயின் கூறினார்.
யுவர்ஸ்டோரியின் Tamil Nadu Story 2024 நிகழ்வில் அவர் மேலும் கூறியதாவது,
"சிந்தனை செயல்முறை தெளிவாக இருந்தால், பணத்தைப் பெறுவது ஒரு தடையாக இருக்காது, ஏனெனில் அதைப் பெறுவதற்கு பல்வேறு வடிவங்கள் உள்ளன. நீங்கள் பணம் சம்பாதிக்கவில்லை என்றால் வளர முடியாது," என்றார்.
ஒருவர் பல்வேறு வகையான நபர்களிடமிருந்து சரியான விஷயங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
"நாங்களே பூஜ்ஜியத்திலிருந்து மறுதொடக்கம் செய்தபோது ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. எந்தவொரு வணிக நிறுவனத்தின் வெற்றியும் பார்வையை ஊழியர்களுடன் பகிர்ந்துகொள்வதிலும் தங்கள் எண்ணங்களை செயல்படுத்துவதிலும் உள்ளது."
நுழைய வேண்டும் ஆனால், நல்ல தொழிலாக இருக்க வேண்டும் என்று நினைக்கத் தேவையில்லை எந்த முயற்சியையும் சிறப்பாகச் செய்வதற்கான உந்துதல் இருக்க வேண்டும் என்பதுதான் விஷயம். இந்த உந்துதல் இருந்தால் எந்த ஒரு வணிகத்தையும் வெற்றி பெறச் செய்யலாம்.
தமிழ்நாட்டில் நிறைய நேர்மறை ஆற்றல் உள்ளது, எல்லோரும் சகஜமாக நடைமுறை ரீதியான பார்வையுடன் உள்ளனர், இவ்வாறு கூறினார் ஜெயின்.
ஸ்டார்ட் அப்களுக்கு இவரே பெரிய ஊக்குவிப்பாளர். இன்றளவில் அவர் 30 ஸ்டார்ட்-அப் தொழில்களில் முதலீடு செய்துள்ளார். முதலீடு என்று வரும்போது ஜெயின் எந்த ஒரு திட்டத்தின் வர்த்தக அம்சத்தை மட்டுமே பார்த்து முதலீடு செய்கிறார்.
ஸ்டார்ட் அப்களுக்கு பணம், முதலீடு கிடைப்பதில் சிக்கல் இல்லை என்று கூறும் அனில் ஜெயின் செயல்திறன் என்பதை அடிப்படையாக அவர்கள் கொள்ள வேண்டும் என்றும் தங்களது வர்த்தகத்தை அளவீட்டு மதிப்பீடு செய்வது அவர்களுக்கு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.