Stock News: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம் என்ன?
கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தையானது உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 216.81 புள்ளிகள் அதிகரித்து 61,510 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 50.75 புள்ளிகள் அதிகரித்து 18,563 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
உயர்வுக்கான காரணங்கள்:
சீனாவில் நிலவி வரும் கொரோனா பரவலும், அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விகித குறைப்பு தொடர்பான நடவடிக்கையும் முதலீட்டாளர்களை இந்தியாவை நோக்கி திருப்பியுள்ளது. சில்லறை முதலீட்டாளர்களாலும், நவம்பரில் இதுவரை ரூ.31,600 கோடிக்கும் அதிகமான நிகர முதலீட்டைச் செய்துள்ள வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் (FPIs) வருகையும் காலை முதலே புதிய உச்சத்துடன் இந்திய பங்குச்சந்தை வர்த்தகமாக காரணமாக அமைந்துள்ளது.
சீனாவின் கொரோனா தாக்கம் தொடர்ந்து பரவி வருவது சியோல், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட ஆசிய பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
பிபிசிஎல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஹீரோ மோட்டோகார்ப்
எஸ்பிஐ லைஃப்
பஜாஜ் ஆட்டோ
விப்ரோ
மாருதி
டெக் மஹிந்திரா
கோடக் மஹிந்திரா வங்கி
இன்ஃபோசிஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
இறக்கம் கண்ட பங்குகள்:
ஹெச்டிஎஃப்சி
டாடா ஸ்டீல்
எச்டிஎஃப்சி வங்கி
இண்டஸ்இண்ட் வங்கி
ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 6 காசுகள் சரிந்து 81.77 ஆக உள்ளது.