Stock News: பங்குச்சந்தை நிலவரம் - இறங்குமுகத்திலிருந்து மீண்டது சென்செக்ஸ், நிப்டி!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சற்று முன் நிலவரப்படி, 618.32 புள்ளிகள் உயர்ந்து 80658.62 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 225.30 புள்ளிகள் உயர்ந்து 24631.40 புள்ளிகளாகவும் இருந்தன
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமையான இன்று (26-07-2024) சரிவிலிருந்து மீண்டு ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன. சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 618 புள்ளிகள் உயர்வு கண்டது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சற்று முன் நிலவரப்படி, 618.32 புள்ளிகள் உயர்ந்து 80658.62 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 225.30 புள்ளிகள் உயர்ந்து 24631.40 புள்ளிகளாகவும் இருந்தன.
நேற்றைய சரிவுக்கு பெரும்காரணமான நிப்டி பேங்க் குறியீடு இன்று மேலும் 125 புள்ளிகள் சரிவு கண்டுள்ளது. நிப்டி ஐடி குறியீடு 754 புள்ளிகள் உயர்வடைய பிஎஸ்.இ ஸ்மால் கேப் சுமார் 621.64 புள்ளிகள் உயர்ந்துள்ளது.
காரணம்:
மத்திய பட்ஜெட் காரணமாக சரிவு நிலையில் இருந்த சென்செக்ஸ் இன்று உயர்ந்ததற்குக் காரணம், முதலீட்டாளர்கள் சரிவு கண்டதால் ஏற்பட்ட குறைந்த விலைகளை அடுத்து மீண்டும் பங்குக் கொள்முதலில் ஈடுபட்டதையடுத்து புள்ளிகள் உயர்ந்தன.
![stock](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/463-1721972782585.jpg?fm=png&auto=format&w=800)
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
இன்போசிஸ்
எல்.டி.ஐ.எம்
ஸ்ரீராம் பைனான்ஸ்
பார்தி ஏர்டெல்
எய்ஷர் மோட்டார்ஸ்
எல் அண்ட் டி
நெஸ்லே இந்தியா
இறக்கம் கண்ட பங்குகள்:
டெக் மகீந்திரா
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஓ.என்.ஜி.சி.
நெஸ்லே இந்தியா
டாடா மோட்டார்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் பலவீனமடைந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.83.72ஆக உள்ளது.