Stock News: பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்- முதலீட்டாளர்களின் பதற்றம் ஏன்?
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கட்கிழமையன்று (15-04-2024) எதிர்மறையாக வர்த்தகத்தை பின்னடைவுடன் தொடங்கியுள்ளன.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கட்கிழமையன்று (15-04-2024) எதிர்மறையாக வர்த்தகத்தை பின்னடைவுடன் தொடங்கியுள்ளன.
பி.எஸ்.இ. சென்செக்ஸ் குறியீடு காலை வர்த்தகத் தொடக்க நிலவரப்படி, 731 புள்ளிகள் அல்லது 0.9% சரிவடைந்து 73,502 புள்ளிகளுடன் இருந்தது. அதே போல், தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 230 புள்ளிகள் அல்லது 1% பின்னடைவு கண்டு 22,289 புள்ளிகளுடன் உள்ளது. இதோடு மட்டுமல்லாமல் நிப்டி மிட் கேப் 100 மற்றும் ஸ்மால் கேப் 100 குறியீடுகளும் 3% அளவுக்குச் சரிவு கண்டன.
சரிவுக்கான காரணங்கள்:
திங்கட்கிழமை (15-4-2024), பங்குச் சந்தையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட பல காரணங்கள் உள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இஸ்ரேல் மீது ஈரானின் ட்ரோன் தாக்குதல், கச்சா எண்ணெய் விலை உயர்வு அச்சம், அமெரிக்க பணவீக்க விகிதத்தின் எதிர்மறை நிலை, மற்றும் இந்தியத் தேர்தலுக்கு முந்தைய பதற்றங்கள் ஆகிய காரணங்களாலும் ஆசியப் பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கியதாலும், மத்திய கிழக்குப் பதற்றங்களால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு சாத்தியங்களை நோக்கிச் செல்வதாலும் இன்று பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கின.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
எக்சைடு இந்தியா
வேதாந்தா
இண்டால்கோ
ஓ.என்.ஜி.சி
இறக்கம் கண்ட பங்குகள்:
டாடா ஸ்டீல்
ஜியோ பைனாசியல்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ. 83.43 ஆக உள்ளது.