Stock News: முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸ், நிஃப்டி அதிரடி உயர்வு!
வாரத்தின் முதல் நாளான நேற்று பெருமளவிலான புள்ளிகள் சரிவடைந்த நிலையில், இன்று காலை முதலே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாரத்தின் முதல் நாளான நேற்று பெருமளவிலான புள்ளிகள் சரிவடைந்த நிலையில், இன்று காலை முதலே சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,174.76 புள்ளிகள் அதிகரித்து 57,962 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 350.35 புள்ளிகள் அதிகரித்து 17,237 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
காரணம்: பிரிட்டனில் சமீபத்தில் அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு ஏற்ற வகையில் வரி குறைப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது கடும் சர்ச்சையை உருவாக்கியது. இதனால் டாலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது. தற்போது அந்த வரி குறைப்பு சட்டம் அகற்றப்பட்டதை அடுத்து, ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளன. இது உலகளாவிய பங்குச்சந்தைகள் மற்றும் பத்திர முதலீடுகளை அதிகரித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் என முதலீட்டாளர்கள் நம்புவதால், பங்குச்சந்தை முதலீடுகள் அதிகரித்து வருகிறது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
இண்டஸ்இண்ட் வங்கி
இந்துஸ்தான் யூனிலீவர்
ஐடிசி
பஜாஜ் ஃபைனான்ஸ்
பார்தி ஏர்டெல்
டாக்டர் ரெட்டீஸ்
என்டிபிசி
விப்ரோ
எல் அண்ட் டி
பஜாஜ் ட்வின்ஸ்
டாடா ஸ்டீல்
எம்&எம் பைனான்சியல் சர்வீஸ்
ரூபாய் மதிப்பு நிலவரம்: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42 காசுகள் சரிந்து 81.82 ரூபாயாக உள்ளது.