Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

Stock News: தடுமாறிய பின் மீண்டெழுந்த பங்குச் சந்தை - நடப்பது என்ன?

வர்த்தக தொடக்கத்தில் தடுமாறிய இந்திய பங்குச் சந்தைகள் பின்னர் மீண்டெழுந்து ஏற்றம் கண்டன. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்துள்ளன.

Stock News: தடுமாறிய பின் மீண்டெழுந்த பங்குச் சந்தை - நடப்பது என்ன?

Thursday January 30, 2025 , 1 min Read

வர்த்தக தொடக்கத்தில் தடுமாறிய இந்திய பங்குச் சந்தைகள் பின்னர் மீண்டெழுந்து ஏற்றம் கண்டன. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்துள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.30) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 106.13 புள்ளிகள் சரிந்து 76,426.83 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 92.8 புள்ளிகள் உயர்ந்து 23,050.05 ஆக இருந்தது.

வர்த்தக தொடக்கத்தின்போது வீழ்ச்சி கண்டாலும், அடுத்த சில நிமிடங்களிலேயே பங்குச் சந்தை மீண்டெழுந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று முற்பகல் 11.40 மணியளவில் சென்செக்ஸ் 163.47 புள்ளிகள் (0.21%) உயர்ந்து 76,696.43 ஆகவும், நிஃப்டி 68.60 புள்ளிகள் (0.30%) உயர்ந்து 23,231.70 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை இறக்கத்துடன் நிலை கொண்டது. ஆசிய பங்குச் சந்தைகளில் டோக்கியோவில் ஏற்றம் நிலவுகிறது. சியோல், ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை. அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முடிவு, மத்திய அரசு பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு உள்ளிட்ட காரணங்களுடன் இடையிடையில் தடுமாற்றும், ஏற்றமும் இந்தியப் பங்குச் சந்தைகளில் நிலவுகிறது.

sensex

ஏற்றம் காணும் பங்குகள்:

பஜாஜ் ஃபைனான்

எம் அண்ட் எம்

பாரதி ஏர்டெல்

ஏசியன் பெயின்ட்ஸ்

எல் அண்ட் டி

டெக் மஹிந்திரா

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

டைட்டன் கம்பெனி

டாடா ஸ்டீல்

நெஸ்லே இந்தியா

டிசிஎஸ்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

விப்ரோ

சன் பார்மா

ஐசிஐசிஐ பேங்க்

கோடக் மஹிந்திரா பேங்க்

இன்ஃபோசிஸ்

டாடா மோட்டார்ஸ்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா வீழ்ச்சி கண்டு ரூ.86.59 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan