Stock News: பங்குச்சந்தை நிலவரம் - மீண்டும் ஏற்றப்பாதைக்குத் திரும்பிய சென்செக்ஸ்!
நிப்டி பேங்க் இன்று 347 புள்ளிகளும் நிப்டி ஐடி 525 புள்ளிகளும் ஏற்றம் கண்டுள்ளது. பிஎஸ்இ. ஸ்மால் கேப் 321.74 புள்ளிகள் பிஎஸ்இ மிட் கேப் சுமார் 1% உயர்வு கண்டுள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமையான இன்று (9-08-2024) ஏற்றம் கண்டுள்ளன. மும்பைப் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடக்கத்தில் 800 புள்ளிகள் உயர்வு கண்டுள்ளது
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சற்று முன் நிலவரப்படி, 720 புள்ளிகள் உயர்ந்து 79,606.63 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 214 புள்ளிகள் உயர்ந்து 24,330.95புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் இன்று 347 புள்ளிகளும் நிப்டி ஐடி 525 புள்ளிகளும் ஏற்றம் கண்டுள்ளது. பிஎஸ்இ. ஸ்மால் கேப் 321.74 புள்ளிகள் பிஎஸ்இ மிட் கேப் சுமார் 1% உயர்வு கண்டுள்ளது.
காரணம்:
இன்று ஐடி நிறுவனப்பங்குகள் பங்குச் சந்தை ஏற்றத்தில் மையம் கொண்டுள்ளது. மற்ற தொழிற்பிரிவுப் பங்குகளும் கிரீனில் உள்ளதால் இன்று பங்குச் சந்தை உயர்வு கண்டது.
![stock exchange](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/383-1723180390572.jpg?fm=png&auto=format&w=800)
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
டாடா மோட்டார்ஸ்
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
ஜொமாட்டோ
எய்ச்சர் மோட்டார்ஸ்
டெக் மகீந்திரா
இன்போசிஸ்
டிசிஎஸ்
ஹெச்.சி.எல்.
இறக்கம் கண்ட பங்குகள்:
பீ.பி.சி.எல்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.83.96 ஆக உள்ளது.