Stock News: பங்குச்சந்தை நிலவரம் - சென்செக்ஸ், நிப்டி தொடர் சரிவு- காரணம் என்ன?
இன்றைய சரிவுக்கு பெரும்காரணமான நிப்டி பேங்க் குறியீடு 623 புள்ளிகள் சரிவு கண்டுள்ளது. நிப்டி ஐடி குறியீடு 154 புள்ளிகள் சரிவடைய பிஎஸ்.இ ஸ்மால் கேப் சுமார் 32 புள்ளிகள் சரிந்துள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையான இன்று (25-07-2024) சரிவடைந்து மந்தநிலை தொடர்ந்து வருகின்றன. சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகள் சரிவு கண்டது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சற்று முன் நிலவரப்படி, 409.20 புள்ளிகள் குறைந்து 79,739.68 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி 50 குறியீடு 100.30 புள்ளிகள்குறைந்து 24,313.20 புள்ளிகளாகவும் இருந்தன.
இன்றைய சரிவுக்கு பெரும்காரணமான நிப்டி பேங்க் குறியீடு 623 புள்ளிகள் சரிவு கண்டுள்ளது. நிப்டி ஐடி குறியீடு 154 புள்ளிகள் சரிவடைய பிஎஸ்.இ ஸ்மால் கேப் சுமார் 32 புள்ளிகள் சரிந்துள்ளது.
காரணம்:
மத்திய பட்ஜெட்டில் நேற்று நீண்ட கால மூலதன ஆதாயம் மற்றும் குறுகிய கால மூலதன ஆதாயத்தின் மீதான வரியை அதிகரிக்கப்பட்டதும் நிப்டி பேங்க் குறியீட்டின் கடும் சரிவும் இன்றைய பங்குச் சந்தைச் சரிவுகளுக்குப் பிரதான காரணமாகியுள்ளன.
![stock market](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/453-1721885492451.png?fm=png&auto=format&w=800)
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
டாடா மோட்டார்ஸ்
எல் அண்ட் டி
நெஸ்லே இந்தியா
இறக்கம் கண்ட பங்குகள்:
ஆக்சிஸ் பேங்க்
டாடா ஸ்டீல்
பவர் கிரிட்
ஐசிஐசிஐ வங்கி
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் பலவீனமடைந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.83.69ஆக உள்ளது.