Stock News: பங்குச்சந்தை நிலவரம் - சென்செக்ஸ், நிப்டி இன்று சற்றே உயர்வுடன் தொடக்கம்!
உலக மற்றும் ஆசியப் பங்குச் சந்தைகளின் நிலவரங்களின் படி, இந்தியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் திங்கட்கிழமை (01-07-24) சற்றே உயர்ந்துள்ளன.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று திங்கட்கிழமை (01-07-2024) சற்றே உயர்வு கண்டுள்ளது சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 79,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 24 ஆயிரம் புள்ளிகளைச் சற்றே கடந்துள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் சற்று முன் நிலவரப்படி, 113 புள்ளிகள் உயர்ந்து 79,146.11 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு வெறும் 38.75 புள்ளிகள் அல்லது 0.04% மட்டுமே உயர்ந்து 24,049.35 புள்ளிகளாகவும் இருந்தன.
பரந்துபட்ட குறியீடுகளில் மின்சாரம் மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகளைத் தவிர மற்றவை ஏற்றம் கண்டு வருகின்றன. நிப்டியில் ஹீரோ மோட்டார் கார்ப்பரேஷன், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல் ஏற்றம் கண்டு வருகின்றன. பி.எச்.இ.எல், அதானி எனெர்ஜி, அதானி கிரீன் எனெர்ஜி போன்றவை பின்னடைவைக் கண்டுள்ளன.
![Stock news](https://images.yourstory.com/cs/18/40b57b80a91b11ed8d456bd40c7ffe66/StockNewsYSTamil-1719808147666.jpg?fm=png&auto=format&w=800)
காரணம்:
முதலீட்டாளர்களின் எச்சரிக்கை உணர்வு காரணமாக பங்குச் சந்தையில் இன்று ஏற்ற நிலை குறைவாகக் காணப்படுகிறது. போகப்போக முன்னேறலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றன.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
மாருதி
ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல்
பார்தி ஏர்டெல்
டாடா ஸ்டீல்
அல்ட்ரா டெக் சிமெண்ட்
நெஸ்லே
மகீந்திரா அண்ட் மகீந்திரா
இறக்கம் கண்ட பங்குகள்:
அதானி எனெர்ஜி
அதானி கிரீன் எனெர்ஜி
கோட்டக் வங்கி
ஏஷியன் பயிண்ட்ஸ்
என்.டி.பி.சி.
பவர் கிரிட்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே உயர்ந்து டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.83.43 ஆக உள்ளது.