Stock News: அதளபாதாளத்திற்கு பாய்ந்த பங்குச்சந்தை; சரிவுக்கு காரணம் என்ன?
இந்திய பங்குச்சந்தையானது இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய பங்குச்சந்தையானது இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (27/01/2023):
கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தையானது புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வந்த நிலையில், இன்று யாருமே எதிர்பாராத அளவிற்கு கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 638.50 புள்ளிகள் சரிந்து 59,566 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 179.25 புள்ளிகள் சரிந்து 17,720 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
சரிவுக்கான காரணம் என்ன?
கடந்த சில இரு தினங்களாக இந்திய பங்குச்சந்தையில் ஐ.டி., ஆட்டோ, வங்கி ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகள் நல்ல உயர்வுடன் வர்த்தகமாகி வந்தன. ஆனால் இன்று வங்கி துறை பங்குகளில் ஏற்பட்டுள்ள இறக்கம் இந்திய பங்குச்சந்தையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி நிஃப்டி 798.35 புள்ளிகள், அதாவது 1.92% சரிந்து 40,849.30 ஆக உள்ளது. இதனால் ஐசிஐசிஐ பேங்க், ஆக்சிஸ் பேங்க், எஸ்பிஐ, கோடக் பேங்க் ஆகியவை வங்கிகளின் குறியீடு மிகவும் பின் தங்கியுள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
டாடா மோட்டார்ஸ்
ஐடிசி
மஹிந்திரா & மஹிந்திரா
டாடா ஸ்டீல்
இறக்கம் கண்ட பங்குகள்:
ஐசிஐசிஐ பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஆக்சிஸ் பேங்க்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,
கோடக் மஹிந்திரா பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் அதிகரித்து 81.48 ஆக உள்ளது.