தமிழக பட்ஜெட் 2021: தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் மற்றும் ஒதுக்கீடுகள் என்ன?
தமிழ்ப் படைப்புகள் மொழி பெயர்க்கப்படும் என அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளில் தமிழக பட்ஜெட் 2021-22-க்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை முதல்முறையாக தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் பி.டி.ஆர். தமிழக வரலாற்றில் முதல்முறையாக காகிதமில்லாத இ-பட்ஜெட்டாக இந்த நிதி நிலை அறிக்கை தாக்கலானது.
இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியான நிலையில், தமிழ் மொழிக்கு முக்கியவத்துவம் கொடுத்து பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அந்த அறிவிப்புகளை இதில் பார்ப்போம்!
அந்த அறிவிப்புகள்!
* பட்ஜெட்டில் தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை.
* தொல்லியல் ஆய்வுக்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அறிவியல் முறையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
* கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை ஆய்வுகள் தமிழர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. இதன்காரணமாக கீழடி, சிவகளை, கொடுமணம் அகழாய்வு இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் மையங்களாக அறிவிக்கப்படும்.
* மாநிலம் முழுவதும் நவீன நில ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை.
* தமிழ் வளர்ச்சித் துறைக்கு பட்ஜெட்டில் ரூ. 80.26 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* சங்ககால துறைமுகங்கள் அமைந்திருந்த இடங்களில் கடல்சார் துறையுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ள நடவடிக்கை.
* ஆண்டுதோறும் ஜூன் 3ம் தேதி கலைஞர் கருணாநிதி செம்மொழி விருது வழங்கப்படும். இந்த விருதின் பரிசுத்தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
* செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலில் திட்டத்தின் கீழ் தமிழ்ப் படைப்புகள் மொழி பெயர்க்கப்படும்.