'ஆழ்நுட்பம், வளரும் நுட்பத்தில் முன்னேறும் தமிழ்நாடு' – அமைச்சர் பழநிவேல் தியாகராஜன் பெருமிதம்!
தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் முதலாண்டு விழாவில், வளரும் தொழில்நுட்பம் மற்றும் ஆழ் நுட்ப புதுமையாக்கத்திற்கான மாநில அரசின் எதிர்கால திட்டத்தை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் எடுத்து கூறினார்.
தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் முதலாண்டு விழாவில், வளரும் தொழில்நுட்பம் மற்றும் ஆழ் நுட்ப புதுமையாக்கத்திற்கான மாநில அரசின் எதிர்கால திட்டத்தை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எடுத்து கூறினார்.
தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை ஆகியவை தொழில்துறையுடன் இணைந்து உருவாக்கிய தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தை (iTNT Hub) கடந்த ஆண்டு மே மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
இந்த மையம், ஏஐ, சைபர் பாதுகாப்பு, ரோபோடிக்ஸ், உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தி வருகிறது. இது சென்னை கோட்டூர்புரத்தில் நவீன வசதிகளுடன் இயங்கி வருகிறது.
இந்த மையத்தின் முதலாமாண்டு விழா, சர்வதேச பங்குதாரர்கள், தொழில்துறையினர், முன்னணி கல்வியாளர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், அரசுத் துறை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியாக அமைந்தது. உலகலாவிய புதுமையாக்க மாற்றத்தை உண்டாக்குவதற்கான நாட்டின் முதல் ஆழ் நுட்ப புதுமையாக்க நெட்வொர்க்கை உருவாக்குவதில் இந்த மையம் கவனம் செலுத்தும் நிலையில், இந்த நிகழ்ச்சி, வரும் 2024- 25ம் ஆண்டிற்கான பாதையை அமைத்தது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, பழநிவேல் தியாகராஜன் சிறப்புரை நிகழ்த்தும் போது,
"ஆழ்ந்த தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் வருகையுடன் நாம் தொழில்நுட்பத் துறையில் ஒரு சுவாரஸ்யமான திருப்புமுனையில் இருக்கிறோம். செயற்கை நுண்ணறிவு மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்று சிலர் வாதிடலாம், ஆனால் அது பல வழிகளில் வேலையின் தன்மையை ஆழமாக மாற்றுகிறது என்பதில் சந்தேகமில்லை, அது சீர்குலைப்பதாகவோ, புதிய வகையான வாய்ப்புகள் மற்றும் நிறுவனங்களை உருவாக்குவதாகவோ இருக்கலாம்," என்று அவர் கூறினார்.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன் பேசும் போது,
"விரைவில் அறிமுகம் ஆக உள்ள ஆழ்நுட்ப ஸ்டார்ட் அப் கொள்கை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் கூடுதல் செயலர் தீரஜ் குமார், ஆழ்நுட்பம் மற்றும் வளரும் நுட்பங்களில் தமிழ்நாடு சூழலை வலுப்படுத்தும் முயற்சிகள் பற்றி எடுத்துரைத்தார்."
இந்த மையம், தமிழ்நாடு ஸ்மார்ட் மற்றும் அட்வான்ஸ் மேனபேக்சரிங் செண்டர் மற்றும் சீமென்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெடுத்திட்டது. மேலும், தமிழ்நாடு சென்டர்ஸ் பார் அட்வான்ஸ்டு மேனபேக்சரிங், டசால்ட் சிஸ்ட்மசுடன், தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி நிர்வாக கார்ப்பரேஷனுடன், அமேசான் வெப் சர்வீசஸ், மைக்ரோசாப்ட், இந்திய ஸ்கூப் ஆப் பிஸ்னச், டி-ஹப், டி-ஒர்க்ஸ் ஐதராபாத் ஆகிய அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஜிக்சா திட்டம் வாயிலாக மையம், சாத்தியமாக்கிய இரண்டு தொழில்நுட்ப பரிமாற்றங்கள் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக அமைந்தது. தொழில்துறை, கல்வி நிறுவனங்கள் இடையிலான கூட்டு முயற்சியை ஊக்குவிக்கும் ஜிக்சா மேடை இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் பங்கேற்கும் இந்த தொழில்நுட்ப பரிமாற்றம் பேராசிரியர் மஞ்சுலா மற்றும் அஸ்ட்ரோமேடா ஸ்பேஸ் நிறுவனம் இடையிலான தொழில்நுட்பம் பரிமாற்றம் தொடர்பான ஆர்வத்தையும் உள்ளடக்கியது. இரண்டாவது பரிமாற்றம் மருந்து கண்டுபிடிப்பு தொடர்பானது.
தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் சி.இ.ஓ வனிதா வேணுகோபால் பேசுகையில்,
"ஆழ்நுட்ப புதுமையாக்கத்திற்கான தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை தொடர்பான விவாதத்தை வழிநடத்தினார். அண்ணா பல்கலை துணை வேந்தர் டாக்டர்.வேல்ராஜ், காப்புரிமை கட்டுப்பாடு அலுவலக ஜாயிண்ட் கண்ட்ரோலர் தங்கபாண்டியன், சிஐஐ எஸ்.ஆர் திறன் செயல்குழு தலைவர் பத்மகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகச்சியில் ஆய்வு முயற்சியை ஊக்குவிக்க 50 உயர் கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
Edited by Induja Raghunathan