காஸ்ட்லியான விவாகரத்தால் உலக பணக்காரர் மகுடத்தை இழக்கப் போகிறாரா ஜெப் பெசோஸ்!
மனைவியை டைவர்ஸ் செய்யவுள்ளதால் ஜெஃப் பெசோஸ் உலகப் பணக்கார மகுடத்தை ஏன் இழக்கிறார் என தெரியுமா?
உலகின் பணக்காரர் மகுடத்திற்கான மோதல் மீண்டும் செய்திகளில் இடம்பிடிக்கத் துவங்கியிருக்கிறது. தற்போதைய நிலையில், தொழில்நுட்பக் கோடீஸ்வரர்களான ஜெப் பெசோஸ் மற்றும் பில் கேட்ஸ் போட்டியில் இருக்கின்றனர்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உலகின் பணக்காரர் எனும் மகுடத்தை தக்க வைக்க முயற்சிக்கும் நிலையில், பில் கேட்ஸ் அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். இருவருக்கும் இடையே 4 பில்லியன் டாலர் தான் வேறுபாடு. 2017 மத்திய பகுதி வரை பில்கேட்ஸ் முதலிடத்தில் இருந்தார். அதன் பிறகு பேசோஸ் அந்த இடத்தைப் பிடித்தார்.
2019ல் பெசோஸ் செல்வமதிப்பு 15.7 பில்லியன் டாலர் குறைந்தது. பில்கேட்ஸ் செல்வமதிப்பு 14.2 பில்லியன் டாலர் உயர்ந்தது. ப்ளும்பர்க் பணக்காரர்கள் பட்டியலின் படி, பெசோஸ் மற்றும் கேட்ஸ் செல்வம் முறையே, 109 பில்லியன் மற்றும் 105 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.
2018ல் பெசோஸ்-ன் செல்வம் 50 பில்லியன் டாலர் உயர்ந்தது. பங்குச்சந்தையில் அவரது நிறுவன பங்குகள் உயர்ந்ததே இதற்குக் காரணம். இந்நிலையில், அவர் தனது மனைவி மெக்கின்சியை விவாகரத்து செய்ய இருப்பதாக அறிவித்ததை அடுத்து, செல்வம் 150 பில்லியனில் இருந்து 115 பில்லியன் டாலராக குறைந்தது.
விவாகரத்து செட்டில்மெண்ட் படி, மெக்கின்சிக்கு பெசோசின் பங்கில் 25 சதவீதம், அதவாது 35.6 பில்லியன் டாலர் கிடைக்க உள்ளது. இது அவரை அமேசானின் பெரிய பங்குதாரர்களில் ஒருவராக ஆக்குவதோடு, உலகின் மூன்றாவது பணக்கார பெண்மணியாகவும் ஆக்கியுள்ளது.
இருப்பினும், பெசோஸ் தனிப்பட்ட பங்குகளைக் கொண்ட புளு ஆரிஜின் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவற்றில் அவர் பங்குகளை பெறவில்லை. இதனிடையே, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் மேலும் செல்வந்தராகி இருக்க முடியும்.
கேட்ஸ் தனது மனைவியுடன் சேர்ந்து நடத்தும் பில் &மெலிண்டா அறக்கட்டளைக்கு 35 பில்லியன் டாலர் வழங்கியுள்ளார். தனது சொத்தில் பாதிக்கு மேல் நன்கொடையாக அளிக்க அவர் உறுதி கொண்டுள்ளார்.
இடையே, குறுகிய காலத்திற்கு அவர் கோடீஸ்வரர் பெர்னார்டு அர்னால்டால் பின்னுக்குத் தள்ளப்பட்டார். எனினும், மைக்ரோசாப்ட் பங்குகள் எழுச்சியால், கேட்ஸ்-ன் செல்வமதிப்பு உயர்ந்துள்ளதோடு, உலகின் பணக்காரர் எனும் மகுடத்தை பெசோசிடம் இருந்து பெறவும் வாய்ப்புள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில் : சைபர்சிம்மன்