பிளாஸ்டிக் இல்லா சுற்றுச் சூழலில் தன் குழந்தையை வளர்க்கும் தாய்!
தமிழ்நாட்டில் தற்போது தான் பிளாஸ்டிக்கிற்கு தடை வந்துள்ளது. ஆனால் சுற்றுச்சூழல் விழிப்புணர்வும், ஆரோக்கிய வாழ்க்கையை விரும்பும் அனாமிகா தன் குடும்பத்தில் இந்த தடையை 2014 முதலே செயல்படுத்தியுள்ளார்.
தற்போது பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அபாயம் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. நிலத்திற்கும், நீர் நிலையங்களுக்கும், விலங்குகளுக்கும் பிளாஸ்டிக்கால் அதிகப் பாதிப்பு என்பதால் அரசாங்கமும் பிளாஸ்டிக் தடை செய்துள்ளது. இதை முன்னதகாவே யோசித்த அனாமிக்கா தன் குழந்தை பிறந்தவுடன் அன்றாட வாழ்க்கையில் அபாயமான பிளாஸ்டிக்கை தனது குழந்தையின் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடாது என முடிவு செய்துள்ளார். அதுவே பின் அவரின் தொழில் யோசனையாகவும் மாறிவிட்டது.
அனாமிகா தன் குழந்தை பிறந்தவுடன், அவரை சுமந்து செல்ல துணி டைப்பர்களை தேடத் துவங்கியுள்ளார். இந்தியாவில் அதுபோன்று எதுவும் இல்லாததால் அமெரிக்காவில் இருந்து வரவழைத்து பிலாஸ்டிக்கில்லா தன் குழந்தை வளர்ப்பு பயணத்தைத் துவக்கியுள்ளார்.
“இதை இப்படிச் செய்ய வேண்டும் என்ற எந்த வரையறையும் எனக்கு இல்லை, என் குழந்தை பிறந்த பிறகு அவரின் நலத்தை மட்டும் மனதில் கொண்டு சில ஆராய்சிகளை செய்தேன்,” என்கிறார் அனாமிகா.
துணி உரையை தொடர்ந்து அடுத்த பெரிய சிக்கலாய் அனாமிகாவிற்கு தெரிந்தது பிளாஸ்டிக் பல் தூரிகை. அதற்கு பதிலாக மூங்கிலால் ஆன பிரஷை பயன்படுத்தத் துவங்கியுள்ளார். ஒரு நாளின் அனைத்து செயல்களுக்கும் மாற்று வழியை தேட பல ஆராய்ச்சிகள் செய்து பல மாற்றங்களை தன் வாழ்க்கையில் கொண்டு வந்துள்ளார் இவர். அதோடு தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் பிளாஸ்டிக் இல்லா வாழ்க்கையை எடுத்துக்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார். பின்னர் அதுவே 2014ல் ’அல்மித்ரா டாட்வா’ என்னும் சுற்றுச் சூழலுக்கு பொருந்திய நிறுவனம் துவங்கக் காரணமாக அமைந்தது.
நிறுவனம் அமைத்த அனாமிகா முதலில் குழந்தையை தூக்கிச் செல்ல துணியால் ஆன அழகிய பேபி கேரியர்களை தயார் செய்தார். இந்திய சந்தைக்காக துவங்கிய இவரது நிறுவனம், ஐரோப்பிய சந்தையில் பிரபலமானது.
தனது நிறுவனத்திற்காக இந்திய கைவினைஞர்களோடு சேர்ந்து பணியாற்றி விதவிதமான பல வடிவங்களில் கையால் செய்ப்பட்ட இயற்கையான பேபி கேரியர்கள் தயார் செய்தார் இவர். இதன் மூலம் இந்திய கைவினைஞர்கள் ஐரோப்பா சந்தை வரை எடுத்துச் சென்று சர்வதேச தளத்தை ஏற்படுத்தி தந்துள்ளார்.
“இந்திய கைவினைஞர்களோடு பணியாற்றியப்போது அவர்கள் மிக எளிமையான நிலையான வாழக்கையை வாழ்கின்றனர் என்பதை அறிந்தேன். அது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை தான் எனக்கும் என் குழந்தைக்கும் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன்.”
நிறுவனம் துவங்குவதற்கு முன் தன் குழந்தை பிறந்தவுடனே பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை முழுவதுமாக நிறுத்திவிட்டார் இந்த தாய். தனது வாழ்க்கையில் மற்றும் தன் குழந்தையின் வாழ்கையில் மாற்றத்தை அனாமிகாவால் ஏற்படுத்த முடிந்தது. இதைப் பரவலாக எப்படி எடுத்துச் செல்வது என யோசித்த போது தோன்றியது இந்நிறுவனம். இப்பொழுது தேவை முதலீடு மற்றும் நிர்வாக அமைப்பு தான்.
“முதலீடு பணமாக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை, நமது திறமை, அனுபவம் நம் வேலைக்கு நாம் ஒதுக்கும் நேரம் முக்கியம். இயற்கையான பேபி கேரியர்களை பெற முடியாமல் இருந்த என் சுற்று வட்டாரத்தின் உந்துதலில் தான் இந்நிறுவனத்தை நான் துவங்கினேன். அதனால் நிறுவனம் துவங்கும் முன்னரே எனக்கு வாடிக்கையாளர்கள் இருந்தனர்” என்கிறார்.
ஏற்கனவே தன் குழந்தைக்காக ஆராய்ச்சி செய்து வைத்திருந்ததால் துணிகளைப் பெற்று தயார் செய்வது மட்டும் அவரது வேலையாக இருந்துள்ளது. இவரது நிறுவனம் 100% வீகன் பிராண்டாகவும் செயல்படுகிறது.
“நாங்கள் வீகன் நிறுவனம் என்பதால் 100% க்கும் பொருட்களை தயார் செய்ய முடியாது எங்கள் பல் துருக்கிகள் 80% சோளமாச்சத்து மற்றும் 20% நைலான் கொண்டு தயாரிக்கப்படுகிறது.”
துவக்கத்தில் நிலையான பிலாஸ்டிக்கில்லா வாழ்க்கை முறையை எடுத்துரைக்க சிரமமாக இருந்தது. தற்பொழுது மக்கள் விழிப்புணர்வு அடைந்து வருகிறார்கள். கூடிய விரைவில் இந்த சூழல் மாறும் என முடிக்கிறார் அனாமிகா.
கட்டுரையாளர்: மஹ்மூதா நௌஷின் | தகவல் உதவி: தி லைஃப்ஸ்டைல் போர்ட்டல்