Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

கிராண்ட் அனிகட்டிலிருந்து ரூ.100 கோடி கடன்நிதி பெற்ற அக்ரி-டெக் நிறுவனம் WayCool

தலா ரூ.10 லட்சம் வெளியீட்டு விலையில் 1,000 தொடர் பி6 கடன் பத்திரங்கள் மூலம் ரூ.100 கோடி மூலதனம் திரட்ட வாரியம் ஒப்புதல் அளித்தது. கடனீட்டுப் பத்திரங்கள் 18 மாத முதிர்வுக் காலத்துடன், ஆண்டுக்கு 18% வட்டி விகிதம் கொண்டது குறிப்பிடத்தக்கது.

கிராண்ட் அனிகட்டிலிருந்து  ரூ.100 கோடி கடன்நிதி  பெற்ற அக்ரி-டெக் நிறுவனம் WayCool

Friday October 04, 2024 , 1 min Read

வேளாண் விநியோகச் சங்கிலித் தொடர் ஸ்டார்ட்-அப் நிறுவனமான சென்னையைச் சேர்ந்த Waycool, கிராண்ட் அனிகட்டில் இருந்து ரூ.100 கோடி கடன் நிதி திரட்டியுள்ளதாக, நிறுவனங்களின் பதிவாளரிடம் தாக்கல் செய்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலா ரூ.10 லட்சம் வெளியீட்டு விலையில் 1,000 தொடர் பி6 கடன் பத்திரங்கள் மூலம் ரூ.100 கோடி மூலதனம் திரட்ட வாரியம் ஒப்புதல் அளித்தது. கடனீட்டுப் பத்திரங்கள் 18 மாத முதிர்வுக் காலத்துடன், ஆண்டுக்கு 18% வட்டி விகிதம் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே இருக்கும் கடன்களுக்கான மறுநிதியளிப்பாகவும் செயல்பாட்டு மூலதனத்திற்காகவும் இந்த கடன் தொகையைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. சமீப காலங்களாக நிதிகள் குறைந்து கொண்டே வருவதாலும் நிதி திரட்டுவதில் ஏற்படும் சிரமப் போராட்டங்களினாலும் இந்தக் கடன் நிதியைக் கோரியது வேகூல் நிறுவனம்.

இந்தப் பின்னடைவுகளை அடுத்து வேகூல் நிறுவனம் தன் அடுத்த சுற்று பணியிழப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது, இதில் 200 பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டது.

waycool

Moneycontrol-ன் அறிக்கையின்படி, வேகூல் நிறுவனம் முன்னர் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதை தள்ளி வைத்தது, மற்றும் ஊழியர்களின் ஜூன் மாத ஊதியமும் கொடுக்கப்படவில்லை. இதோடு வாடிக்கையாளர்களிடமிருந்து வர வேண்டிய தொகையும் கைக்குக் கிட்டாமல் தாமதமானது. இதனையடுத்து, சேவை வழங்குநர்கள் உட்பட விற்பனையாளர்களுக்கு நிலுவையில் உள்ள கொடுக்க வேண்டிய தொகையும் நிலைமைகளை மேலும் மோசமாக்கியது.

2019 ஆம் ஆண்டில், இணை நிறுவனர்களான கார்த்திக் ஜெயராமன் மற்றும் சஞ்சய் தாசரி ஆகியோர் B2C மாடலில் இருந்து ஃபார்ம்-டு-ஃபோர்க் B2B மாடலுக்குச் மாற்றினர். புதிய விளைபொருள் விநியோக தளமானது சிறு விவசாயிகள் மற்றும் சேகரிப்பாளர்களிடமிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை ஆதாரமாகக் கொண்டு பல விநியோக வழிகள் மூலம் விற்பனை செய்கிறது.

அதன் சிக்கலான விநியோகச் சங்கிலியை இயக்க புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்நிலையில்தான் வேகூல் நிறுவனம் கிராண்ட் அனிக்கட்டிலிருந்து ரூ.100 கொடி கடன் நிதி பெற்றுள்ளது.