புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை: தமிழகம் முழுவதும் கட்டுப்பாடுகள் என்னென்ன?
டிசம்பர் 31ம் தேதி இரவு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31ம் தேதி இரவு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில், தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டு நேற்று காவல்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஒமைக்ரான் நிலவரம்:
தமிழ்நாடு அரசின் பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி 619 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 45 ஆயிரத்து 261 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 638 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 1 ஆயிரத்து 974 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 537 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு நேற்று 6 பேர் உயிரிழந்ததை அடுத்து, தொற்றால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல், தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் சமூக தொற்றாக மாறி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், பண்டிகை காலங்களில் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொது மக்கள் வெளியில் தவிர்க்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக வர உள்ள புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை:
தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் இடம் பெற்றுள்ளவை இதோ...
- புத்தாண்டை முன்னிட்டு மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் விதமாக டிசம்பர் 31ம் தேதி அன்று இரவு தமிழ்நாட்டிலுள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் அனைவரும் வீடுகளிலேயே அவரவர் குடும்பத்தினருடன் புத்தாண்டினை மகிழ்ச்சியுடன், மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- வழிபாட்டுத்தலங்களில் தமிழக அரசினால் அறிவுறுத்தப்பட்ட கோவிட் நடத்தை வழிமுறைகளை பின்பற்றுமாறும், புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும் கூட்டம் கூடுவதையும், இரு சக்கர வாகனங்களில் சுற்றுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
- மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி இரவு அன்று, காவல்துறையினரின் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மது அருந்திய ஓட்டுநர்கள் கைது செய்யப்படுவர். அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
- நீண்ட தூரம் பயணம் செய்பவர்கள் இரண்டு சக்கர வாகனத்தில் இரவு நேரங்களில் பயணம் செய்வதை தவிர்த்து. இரயிலிலும், பேருந்திலும் பயணிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
- அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். இதனால் விபத்துக்களை தவிர்க்கலாம்.
- அவசரத்தேவைகளுக்காக நான்கு சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி தேநீர் அருந்தி, பின்னர் பயணத்தினை தொடர அறிவுறுத்தல்.
- ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிகளின்படி, இரவு 11 மணி வரை செயல்படும். ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனரா என ஓட்டல் நிர்வாகம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
- வெளியூர் செல்பவர்கள் பூட்டிய வீட்டினை குறித்து தகவலை அருகிலுள்ள காவல் நிலையத்தில் தெரிவித்தால், ரோந்து காவலர்கள் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். இதனால் திருட்டு சம்பவங்கள் தவிர்க்கப்படும்.
- பொது இடங்களில் அமைதிக்கு குந்தம் விளைவிப்பவர்கள் ரோந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள்.
- வாகன கன்னியமற்ற மற்றும் அநாகரீகமான செயல்களில் ஈடுபடுவோர். பைக் ரேஸ் உள்ளிட்ட ஆபத்தான செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள்.
- அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100,112 எண்களை தொடர்பு கொள்ளுமாறும். KAVALAN - SOS (காவலன். பயன்படுத்துமாறும் காவல்துறை சார்பில் டிஜிபி சைலேந்திர பாபு கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னையில் என்னென்ன கட்டுப்பாடுகள்?
ஒமைக்ரான் பரவல் சென்னையில் அதிகரித்து வருவதை அடுத்து, புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பிரத்யேக கட்டுப்பாடுகளை சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ளது.
- சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட மெரினா கடற்கரை, பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, நீலாங்கரை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் ஒன்று கூட தடை.
- டிசம்பர் 31 அன்று இரவு 09.00 மணிமுதல் சென்னை பெருநகரில் மெரினா கடற்கரை, போர் நினைவுச்சின்னம் முதல் காந்தி சிலை வரையிலான காமராஜர் சாலை மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஓட்டிய சாலையில் வாகனங்கள் செல்ல தடை.
- கடற்கரையை ஒட்டிய சாலைகளான காமராஜர் சாலை, ஆர்.கே.சாலை, ராஜாஜி சாலை, அண்ணாசாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்களை நிறுத்தி புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாட தடை விதிப்பு.
- ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் புத்தாண்டு வர்த்தக ரீதியாக நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.
- அடுக்குமாடி குடியிருப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் வில்லா ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சிகளை ஒன்று கூடி நடத்தக்கூடாது.
- ஓட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் தமிழக அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, இரவு 11.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. ஓட்டல் ஊழியர்கள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என ஓட்டல் நிர்வாகம் கண்காணித்து உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
- அனைத்து ஓட்டல்களிலும், கேளிக்கை விடுதிகளிலும், பண்ணை வீடுகளிலும், பொது இடங்களிலும் கேளிக்கை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், DJ, இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை.
- கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் உட்பட அனைத்து வழிபாட்டுதலங்களிலும், சம்பந்தப்பட்ட நிர்வாகி அதிகாரிகள், தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை (SOP) பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றுகின்றனரா என கண்காணிக்க வேண்டும்.
- கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் உட்பட அனைத்து வழிபாட்டு தலங்களிலும், சம்பந்தப்பட்ட நிர்வாகி அதிகாரிகள், தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை (SOP) பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றுகின்றனரா என கண்காணிக்க வேண்டும். மேலும், அங்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தி, அனைத்து நுழைவு வாயில்களிலும் அகச்சிவப்பு (Infra Red) மற்றும் Thermal Scanner கருவிகளை கொண்டு பரிசோதித்து அனுமதிக்க வேண்டும்.