Ola IPO: முதல் நாள் பங்கு வெளியீட்டில் ஓலா எலெக்ட்ரிக் 35% சந்தாக்களை பெற்றது!
பாவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஐபிஓ ரூ.5,500 கோடிக்கு புதிய வெளியீட்டையும், 8.4 கோடி பங்குகளின் விற்பனைக்கான சலுகையையும் (OFS) கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நிறுவனத்தின் முதல் பொதுப் பங்கு வெளியீட்டின் (IPO) முதல் நாளில் 35% சந்தா பெற்றது, சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் முன்னணியில் உள்ள பங்குகள் 1.57 மடங்கு சந்தா பெற்றன.
நிறுவனமல்லாத பிரிவில் 20% சந்தா பெற்றது. இருப்பினும், தகுதியுடைய பெருநிறுவன பங்குக் கொள்முதலாளர்கள் முதல் நாளில் பங்குகளை வாங்கவில்லை. ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட பங்குகள் 4.88% சந்தாக்களை பெற்றது.
பாவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஐபிஓ ரூ.5,500 கோடிக்கு புதிய வெளியீட்டையும், 8.4 கோடி பங்குகளின் விற்பனைக்கான சலுகையையும் (OFS) கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனம் தாக்கல் செய்த ரெட் ஹெர்ரிங் ப்ரோஸ்பெக்டஸ் (RHP) படி, அகர்வால் ஐபிஓவில் 37.9 மில்லியன் பங்குகளை வெளியீட்டிற்காக வழங்கினார்.
நிறுவனம் தனது ஐபிஓவை ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கின் விலை ரூ.72 முதல் ரூ.76 வரையில் நிர்ணயித்தது. இதன் மதிப்பு ரூ.33,500 கோடியாக (சுமார் $4 பில்லியன்) உள்ளது. வியாழன் அன்று பெருநிறுவன முதலீட்டாளர்களுக்கு பங்குகள் விற்பனைத் திறக்கப்பட்டது. இதில், 80 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியாக பங்கு விற்பனையில் ரூ.2,763 கோடி திரட்டப்பட்டது.
இந்த முதலீட்டாளர்களில் ஸ்டேட் வங்கி மியூச்சுவல் ஃபண்ட், ஹெச்.டி.எஃப்.சி. மியூச்சுவல் ஃபண்ட், நொமுரா முதலீட்டு நிதியம், சிங்கப்பூர் கோல்ட்மான் சாக்ஸ் நிறுவனம் ஆகியோர் அடங்குவார்கள்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் பட்டியலிடப்பட்ட Go
ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குப் பிறகு இந்தியப் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பெங்களூருவைச் சேர்ந்த முதல் பியூர்-பிளே EV தயாரிப்பாளர் மற்றும் இரண்டாவது நிறுவனம் ஓலா எலெக்ட்ரிக் என்பது குறிப்பிடத்தக்கது. பங்கு விற்பனை ஆகஸ்ட் 6ம் தேதி நிறைவடைகிறது.