‘கொரோனாவுக்கு பின் இந்தியா உலகளவில் சிறந்த உற்பத்தி மையமாக விளங்கும்’ - சத்குரு
ஆன்மீகத் தலைவர் சத்குரு வாசுதேவ், ‘கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி அதில் இருந்து எப்படி வர்த்தகங்கள் மீளலாம்’ என்ற தலைப்பில் இணையத்தில் உரையாடினார்.
தொழில்கள் மற்றும் வணிகங்களில் கொரோனா வைரஸின் தாக்கம், குறித்து சமீபத்தில் நடைபெற்ற ஒரு மணிநேர வெபினாரில், சத்குரு வாசுதேவ் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (FICCI) உறுப்பினர்களுடன் உரையாடினார். பொருளாதாரத்தின் நிலையிலிருந்து பல கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றினார் சத்குரு.
இந்த நிச்சயமற்ற காலங்களில் ஒரு நபர் சமாளிக்கக்கூடிய சிறந்த வழி என்ன என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர், ‘கொரோனா வைரஸால் நிலைகுலைந்துள்ள பொருளாதாரம் மற்றும் தொற்றுநோய் அடங்கியவுடன் வணிகங்கள் எவ்வாறு வளரலாம் என்றும் விவாதித்தார்.
எதிர்ப்பாராத வகையில் உலகமெங்கும் தோன்றிய கொரோனா வைரஸ் பரவலால் உலகம் மற்றும் தனிப்பட்ட மட்டத்தில் மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர் ஒப்புக் கொண்டாலும்,
“நாடு மீண்டும் வணிகம் செய்யத் திரும்பியவுடன் வாய்ப்புகளை எப்படி மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த விஷயத்தை விரிவாகக் கூறுகையில், தொற்றுநோய் சரியான நேரத்தில் அடக்கப்பட்டால், இந்தியாவின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை சத்குரு வெளிச்சம் போட்டுக் காட்டினார். மேலும் பல்வேறு அரசியல் மற்றும் வணிகத் தலைவர்கள் இந்த செயல்பாட்டில் தொடர்ந்து தங்கள் பங்கை அளிக்கவேண்டும் என்றார்.
இந்த நெருக்கடி நேரத்தில், உலகின் இரு முக்கிய உற்பத்தி ஜாம்பவான்களாகக் கருதப்படும் அமெரிக்காவும் ஜப்பானும்- இதுவரை சீனாவில் அதிக முதலீடுகளைச் செய்திருந்தன. இனி அவர்களின் பார்வை வேறு பக்கம் நிச்சயம் திரும்பும். இதுபற்றி மேலும் பேசிய சத்குரு,
“அப்போது அவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கும். இதுவே இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு திருப்புமுனையாக அமையும். அரசியல் மற்றும் வணிகத் தலைமை தொற்றுநோயைக் கையாள்வதில் அவர்கள் வெளிப்படுத்திய உறுதியையும், சுறுசுறுப்பையும் தொடர்ந்து காட்டினால் மட்டுமே இது சாத்தியமாகும்,” என்பதை வலியுறுத்தினார்.
மனிதகுலத்தின் மீதான வைரஸின் அளவையும் தாக்கத்தையும் முன்பே கணிக்கமுடியாத நிலையில், தற்போதைய முக்கியமான விஷயம் இதற்கான தீர்வு ஒன்றே என்று கூறினார்.
"இடையூறுகள் எப்போதுமே ஒரு வாய்ப்பாகும். இந்த நிலையில் ஒருவர் என்ன புதிய சாத்தியக்கூறுகளில் ஈடுபடு உள்ளார் என்பதைப் பொறுத்தது,” என்றார் சத்குரு.
FICCI இன் தலைவர் டாக்டர் சங்கிதா ரெட்டி தொகுத்து வழங்கிய இந்த வெபினாரில், முன்னாள் நிறுவன தலைவர்கள் ஒய்.கே மோடி, சுதிர் ஜலான், சந்தீப் சோமானி, ஃபிக்கி சி.எஸ்.ஆர் தலைவர் ராஜாஷ்ரீ பிர்லா மற்றும் FICCI இன் பிற அலுவலகப் பொறுப்பாளர்கள் உட்பட பல தொழில் மற்றும் வணிகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சுகாதார நிபுணர்கள் பங்குகொண்ட மற்றொரு வெபினாரில், சத்குரு தலைமைத் தாங்கினார். அதில் நோய் எதிர்ப்புச் சக்தி, பூஸ்டர் பானம் உட்பட பல வீட்டில் தயாரிக்கப்பட்ட தீர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்.
ஆங்கிலத்தில்: சுத்ரிஷ்னா | தமிழில்: இந்துஜா