தமிழ்நாட்டிற்கு வருகிறது பிரபல 'டாபர் நிறுவனம்' - 400 கோடி ரூபாய் முதலீட்டில் திண்டிவனத்தில் உலகத் தர உற்பத்தி ஆலை!
கைடன்ஸ் தமிழ்நாடும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டாபர் நிறுவனம், தென்னிந்தியாவில் தனது முதல் உற்பத்தி ஆலையை திண்டிவனம் சிப்காட் ஃபுட் பார்க்கில் அமைக்கவுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் டாபர் நிறுவனத்தின் உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவ அந்நிறுவனமும் கைடன்ஸ் தமிழ்நாடும் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
தென்னிந்தியாவில் டாபர் நிறுவனத்தின் முதல் தொழிற்சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது. திண்டிவனம் சிப்காட் ஃபுட் பார்க்கில் இந்த உற்பத்தி ஆலை அமைக்கப்படும். இதற்காக,
"டாபர் நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்கிறது, இதன் மூலம் 250-க்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறும். மேலும் அருகில் உள்ள டெல்டா பாசன விவசாயிகளுக்கு இதன் மூலம் தங்கள் வேளாண் பொருட்களை விற்கவும் ப்ரோசஸ் செய்யவும் வாய்ப்புகள் ஏற்படும்," என்று தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்பி. ராஜா தன் சமூக ஊடகப்பதிவில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தன் வலைப்பதிவில் டிஆர்பி ராஜா மேலும் பதிவிட்டபோது, நம் முதல்வர் ஸ்டாலின் டெல்டாக்காரர், நானும் சட்டப்பேரவை உறுப்பினராக டெல்டா பகுதியிலிருந்து தேர்வு ஆகியிருக்கிறேன். டெல்டா பகுதிக்கு ஒரு நல்ல வகையான உணவு செயலாக்க தொழில்துறை இணைப்புகளை கொண்டு வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
"டாபர் வீட்டுத் தயாரிப்புகள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புத் தயாரிப்புகள் மற்றும் பழச்சாறு தயாரிப்புகளுக்கு புகழ்பெற்றது. தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுப்பதற்கான டாபரின் முடிவு, நமது மாநிலத்தின் செழித்து வரும் தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வேலைக்குத் தயாராக உள்ள தொழிலாளர்கள் உள்ளமை ஆகியவற்றிற்கு சான்றாக விளங்குகிறது. விரைவில் உண்மையான ஜூஸை சுவைப்போம்,” என்று பதிவிட்டுள்ளார்.
TN Investment Conclave 2024: தமிழ்நாட்டில் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்துள்ளது? பட்டியல் இதோ!