மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை துவக்கம்!
இந்தியா முழுவதும் மே 25 ஆம் தேதி முதல் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கும் என விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக, மே 31ம் தேதி வரை இந்தியா முழுதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு கட்டுப்பாட்டுகளின் படி, விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்து. ஆனால் இன்று ட்விட்டரின் பதிவிட்ட விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, உள்நாட்டு விமான நடவடிக்கைகள் அளவீட்டு முறையில் மீண்டும் தொடங்கப்படும் என்றார்.
“அனைத்து விமான நிலையங்களும், விமான நிறுவனங்களும் மே 25 முதல் நடவடிக்கைகளுக்குத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். பயணிகள் நடமாட்டத்திற்கான சிறப்பு இயக்க நடைமுறைகளும் (SOPs) சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் தனித்தனியாக வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார் அமைச்சர்.”
மருத்துவச் சேவைகள், விமான ஆம்புலன்ஸ் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே தற்போது விமானச் சேவை இயங்கி வருகிறது. அதே போல், ‘வந்தே பாரத் மிஷன்’ கீழ் பிற நாடுகளில் உள்ள இந்தியர்களை நாட்டுக்கு அழைத்துவர மட்டும் விமானச் சேவை இத்தனை நாட்கள் இயங்கி வந்தது. அதைத் தவிர, பயணிகளின் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணங்களுக்கும் தடை இருந்து வந்தது.
இதனிடையே இன்று வந்துள்ள இந்த அறிவிப்பை தொடர்ந்து, உள்நாட்டு விமான நிறுவனங்கள் ஜூன் முதல் தங்கள் விமானங்களுக்கான முன்பதிவுகளைத் திறந்துவிட்டதாக PTI செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே நேற்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், ஜூன் 1-ம் தேதி முதல் ரயில் போக்குவரத்து துவங்கு என்றும், நாள்தோறும் 200 ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தநிலையில் ஜூன் 1-ம் தேதி முதல் 200 ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்
‘‘நாடுமுழுவதும் தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் தவிர ஜூன் 1-ம் தேதி முதல் 200 ஏசி அல்லாத ரயில்கள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு விரைவில் தொடங்கப்படும். அதுபோலவே ரயில்கள் குறித்த விவரமும் விரைவில் வெளியிடப்படும்,’’ எனத் தெரிவித்துள்ளது.