மார்ச் 2020 வரை பாரத் நெட் மூலம் கிராமங்களுக்கு இலவச வைஃபை!
பாரத் நெட் மூலம் வழங்கப்படும் வை-ஃபை வசதி 2020 மார்ச் மாதம் வரை இலவசமாக வழங்கப்படும் என்று தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்க பிரசாத் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களில் பாரத் நெட் மூலம் வழங்கப்படும் வை-ஃபை வசதி 2020 மார்ச் மாதம் வரை இலவசமாக இருக்கும் என்று தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
"பாரத் நெட் ஆப்டிகல் நெட்வொர்க் மூலம் ஏற்கனவே 1.3 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை இணைத்துள்ளோம். எங்கள் இலக்கு 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் ஆகும். பாரத் நெட் சேவைகளை பயன்படுத்த ஊக்கம் அளிக்க, 2020 மார்ச் வரை கிராமங்களுக்கு பாரத் நெட் மூலம், வை-ஃபை வசதி இலவசமாக அளிக்கப்படும்,” என்றும் அவர் கூறினார்.
தற்போது, 48,000 கிராமங்கள் பாரத் நெட் மூலம் வை-ஃபை வசதி பெற்றுள்ளன. பொது சேவை மையங்கள் (சிஎஸ்சி) வங்கிச்சேவைகளை வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார். டிஜிட்டல் சேவைகள் வழங்கும் மையங்களாக சிஎஸ்.சி செயல்படுகின்றன.
2014ல் 60,000 ஆக இருந்த மையங்கள் தற்போது 3.60 லட்சம் மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளன. ஹரியானாவில் மட்டும் 11,000 மையங்கள் உள்ளன. சிஎஸ்சி இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிட், நாட்டின் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் டிஜிட்டல் கிராமத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் கிராமங்களாக மாற்றப்பட உள்ளன.
ஹரியானாவில் உள்ள ரேவாரி மாவட்டத்தின் குருவாரா கிராமம், சிஎஸ்சி மூலம் டிஜிட்டல் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. கிராம தொழில்முனைவோர் சோனு பாலாவால் நடத்தப்படும் சிஎஸ்சி மையம், டிஜிட்டல் சேவா போர்டல் மூலம் அரசு சேவைகளை மக்களுக்கு வழங்குகிறது.
"டிஜிட்டல் கிராமம் திட்டம், கிராம பொருளாதாரத்தை மேம்படுத்தி, டிஜிட்டல் இடைவெளியை குறைக்கக் கூடியது,” என்று சிஎஸ்சி இ- கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிட் சி.இ.ஓ தினேஷ் தியாகி கூறுகிறார்.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் மின்னணு சேவைகளை கிராமவாசிகள் பெற வழி செய்யும் வசதி கொண்ட கிராமங்களாக டிஜிட்டல் கிராமங்கள் அமைகின்றன. இந்த கிராமங்கள், மாற்றத்திற்கான உதாரணங்களாக, கிராமப்புற தொழில் முனைவு மேம்படாக முன்னிறுத்தப்படுகின்றன. கிராமப்புற வேலைவாய்ப்பையும் பெருக்குகின்றன.
கல்வி, நிதிச்சேவைகள் மற்றும் மருத்துவச் சேவைகளை டிஜிட்டல் வடிவில் அளிப்பதன் மூலம் மொத்த கிராமத்தையும் மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
டிஜிட்டல் கிராமங்களில் உள்ளவர்கள் டிஜிட்டல் விழிப்புணர்வு பெறுகின்றனர். டெலிமெடிசன் மூலம் மருத்துவ வசதி பெற முடியும். வங்கிச்சேவை, காப்பீடு மற்றும் பென்ஷன் வசதிகளையும் டிஜிட்டல் கிராமம் அளிக்கின்றன. மேலும் மொத்த கிராமமும் வை-ஃபை வசதி பெறுகிறது.
இந்த கிராமங்களுக்கு எல்.இ.டி தொகுப்புப் பிரிவு, சானிட்டரி நாப்கின் பிரிவு, காகித பை பிரிவு, கிராமப்புற பிபிஓ வசதியும் அளிக்கப்படுகின்றன.
செய்தி: பிடிஐ | தமிழில்; சைபர்சிம்மன்