'இந்தியாவின் முதல் ட்ரோன் ஷோரூம்' - சென்னையில் துவக்கிய கருடா ஏரோஸ்பேஸ்!
இந்தியாவின் முன்னணி ட்ரோன் சேவை நிறுவனம் கருடா ஏரோஸ்பேஸ் நாட்டின் முதல் பிரத்யேக டிரோன் ஷோரூமை சென்னையில் திறந்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ட்ரோன் சேவை நிறுவனம் 'கருடா ஏரோஸ்பேஸ்' நாட்டின் முதல் பிரத்யேக ட்ரோன் ஷோரூமை சென்னையில் திறந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் தோனி ஆதரவு பெற்ற கருடா ஏரோஸ்பேஸ் சி.இ.ஓ அக்னீஷ்வர் ஜெயபிரகாஷ் முன்னிலையில் அண்ணா பல்கலை துணை வேந்தர் டாக்டர்.ஆர்.வேல்ராஜ் இதை துவக்கி வைத்தார்.
![garuda](https://images.yourstory.com/cs/18/7f701c9008d911e9bb473d9d98ed1e05/Imagepejm-1717487233956-1717568855484.jpg?fm=png&auto=format)
இந்த ஷோஎரூம், ட்ரோன் ஆர்வலர்கள் மற்றும் ட்ரோன் வல்லுனர்களுக்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் அளிக்கிறது. வாடிக்கையாளர்கள், பார்வையாளர்கள் பல வகையான ட்ரோன்களை பார்வையிடலாம். நேரடியாக வாங்கிக் கொள்ளலாம். ட்ரோன் சந்தையில் இது மிகப்பெரிய பாய்ச்சலாக அமைகிறது.
பர்ஸ்ட் பர்சன் வியூ, வீடியோ, கண்காணிப்பு, விவசாயம், சோதனை, பொழுதுபோக்கு ஆகிய பிரிவுகளுக்கான ட்ரோன் சாதனங்கள் இங்கு உள்ளன.
இந்த ஷோரூம் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவம் அளிப்பதற்காக, தொடர்பு கொள்ளும் தன்மை கொண்ட ட்ரோன் சிமுலேட்டர்கள் மற்றும் விஆர் கண்ணாடிகளை கொண்டுள்ளது. மேலும், ட்ரோன் சேவை பதிவுக்கான நேரடி எல்.இ.டி சுவர் வசதியும் கொண்டுள்ளது.
அடுத்து வரும் மாதங்களில் நிறுவனம் 20 முக்கிய நகரங்களில் தனது ஷோரூம்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கருடா நிருவனம் தெரிவித்துள்ளது.
“கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் முதல் ட்ரோன் ஷோரூம் புரட்சிகர்மானது. ட்ரோன் எதிர்காலத்தை உணர்ந்து, அண்ணா பல்கலையில், கருடா நிறுவனத்திற்கு தேவைப்படும் திறமையாளர்களை உருவாக்க ட்ரோன் நுட்பத்திற்கான பாடத்திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளோம். இந்த ஷோரூம் ட்ரோன்கள் தொடர்பான ஆர்வத்தை மேலும் பரவலாக்கும்," என்று அண்ணா பல்கலை துணை வேந்தர் டாக்டர்.ஆர்.வேல்ராஜ் கூறினார்.
கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ அக்னீஷ்வர் ஜெயபிரகாஷ் கூறுகையில்,
“இந்தியாவின் முதல் ட்ரோன் ஷோரூம் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் மைல்கல் தருணம். ட்ரோன் நுட்பத்தை எல்லோரும் நட்பானதாக மாற்ற உறுதி கொண்டுள்ளோம்,” என்று நிறுவனர் மற்றும் சி.இ.ஓ அக்னீஷ்வர் ஜெயபிரகாஷ் கூறினார்.
இந்தியாவின் முதல் ட்ரோன் நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கருடா ஏரோஸ்பேஸ் சிறிய மற்றும் நடுத்தர ட்ரோன் தயாரிப்புக்கான DGCA அனுமதி பெற்றுள்ளது. ட்ரோன் பயிற்சி அளிக்கவும் அனுமதி பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் தோனி உள்ளிட்டோரின் முதலீட்டு ஆதரவையும் பெற்றுள்ளது. தோனி இதன் விளம்பர தூதராக இருக்கிறார்.
Edited by Induja Raghunathan