Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

மத்திய பட்ஜெட் 2024: மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு

2024-25 ஆம் நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண்கள் மற்றும் பெண்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களுக்காக, பொருளாதார வளர்ச்சியில் அவர்களின் பங்கை மேம்படுத்துவதற்காக, 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கினார்.

மத்திய பட்ஜெட் 2024: மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு

Tuesday July 23, 2024 , 2 min Read

மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் வளர்ச்சித்திட்டங்களுக்கும் சிறுமியர் திட்டங்களுக்காகவும் மத்திய பட்ஜெட்டில் ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

2024-25 ஆம் நிதிஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண்கள் மற்றும் பெண்களுக்குப் பயனளிக்கும் திட்டங்களுக்காக, பொருளாதார வளர்ச்சியில் அவர்களின் பங்கை மேம்படுத்துவதற்காக, 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கினார்.

தொழில்துறையினரின் ஒத்துழைப்புடன் மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தைகள் நலக்காப்பகங்களை உருவாக்குவதன் மூலம் பெண்கள் அதிக அளவில் வேலையில் சேர்வதற்கு அரசு உதவி செய்கிறது.

பெண்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதோடு மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிப்புகளுக்கு சந்தை ஏற்படுத்தித் தரவும் உதவி செய்யப்படும் என்று அறிவித்தார்.

women

நிர்மலா சீதாராமன் இன்று பட்ஜெட் உரையில் கூறும்போது,

“விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஏழைகளின் எங்கும் நிறைந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி," என்பதை வலியுறுத்தினார்.

2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடு ஆக மாற்றும் மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையுடன், வளர்ச்சியை வழிநடத்தும் பொருளாதாரத்தில் பெண்களின் வளர்ச்சி முக்கியத்துவத்தை அது தொடர்ந்து வலியுறுத்தினார் நிர்மலா சீதாராமன்.

மகப்பேறு நன்மை (திருத்தம்) சட்டம்-2017, ஐம்பது அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட ஒவ்வொரு நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்குள் குழந்தை காப்பகத்தின் வசதியைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

SatNav குழுமத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநரும் ஆன அமித் கிஷோர் பிரசாத்,

"தொழிலாளர்களில் பெண்களுக்கு உதவியாக குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும் என்ற நிதியமைச்சரின் உத்தரவாதத்தால் பெரிய ஊக்கத்தைப் பெறுவார்கள். இது ஏற்கனவே மகப்பேறு சட்டம் 2017 இன் ஒரு பகுதியாகும். அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இதை அவசரகதியில் செயல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்,” என்றார்.

மேலும், மத்திய அரசின் முயற்சியினால் 9 கோடி பெண்களைக் கொண்ட 83 லட்சம் சுயஉதவி குழுக்கள் ஒரு கோடி பெண்களை லட்சாதிபதிகளாக அதாவது, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கும் சுயஉதவிக்குழு உறுப்பினர்களாக மாற உதவியுள்ளன.