இந்திய மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றியதா பட்ஜெட் 2020?
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்திய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான துணிச்சலான சீர்திருத்தங்கள் தொடர்பான எதிர்பார்ப்புக்கு மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று தாக்கல் செய்த 2020-2021 ஆண்டு பட்ஜெட், ஆர்வம் கொண்ட இந்தியா, அனைவருக்கும் பொருளாதார வளர்ச்சி மற்றும் நலவாழ்வு சமூகத்தை உருவாக்குவது ஆகிய மூன்று முக்கிய கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்தார்.
“இது, மக்களின் வருமானத்தைப் பெருக்கி, அவர்கள் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கான பட்ஜெட். நம்முடைய தொழில்கள், ஆரோக்கியமாக, உறுதியானதாக, தொழில்நுட்பம் சார்ந்ததாக இருக்கட்டும். நம்முடைய மக்கள் நல்ல வேலைவாய்ப்பைப் பெற வேண்டும். அனைத்து சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர், பழங்குடியினர் என அனைவருக்கும் நம்முடைய தொழில்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்,” என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் நிதி அமைச்சர் வழக்கமான பெட்டிக்கு பதிலாக, இந்திய பாரம்பரிய பதிவேட்டை எடுத்து வந்தார்.
நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து நிகழ்த்திய உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
மத்திய பட்ஜெட், ஆர்வம் கொண்ட இந்தியா, அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி, பரிவும், மனிதாபிமானமும் கொண்ட நலவாழ்வு சமூகமாக நம் சமூகம் இருக்க வேண்டும் ஆகிய மூன்று முக்கிய கருத்தாக்கங்களை அடிப்படையாக கொண்டுள்ளது.”
“அமைப்பு சார்ந்த சீர்திருத்தம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மூலம் நம்முடைய அரசு நிர்வாகத்தில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.”
“ஒட்டுமொத்த பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அடிப்படை அம்சங்கள் வலுவாக உள்ளன. பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது, வங்கிகள் தூய்மையாக்கப்பட்டு, மறுமுதலீடு அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் வெளியே திவால் சட்டம் வழி செய்துள்ளது. பொருளாதாரத்தை முறைப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.”
ஜிஎஸ்டி:
ஜிஎஸ்.டி உருவாக்கத்திற்காக அருண் ஜேட்லிக்கு நினைவஞ்சலி செலுத்தினார். ஜி.எஸ்.டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம் என குறிப்பிட்டு, நுகர்வோர் மற்றும் சிறு, குறும் மற்றும் நடுத்தர தொழில்கள் மீதான தாக்கம் பற்றி குறிப்பிட்டார்.
ஜி.எஸ்.டி காரணமாக சராசரி குடும்பம் மாதச் செலவில் 4 சதவீதம் குறைவாக செலவிடுகிறது. குறைக்கப்பட்ட ஜி.எஸ்.டி விகிதம் காரணமாக, நுகர்வோருக்கு ரூ.1 லட்சம் கோடி பலன் அளிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார சீர்திருத்தங்கள்:
ஏழைகளுக்கு ஆதரவான திட்டங்கள் மற்றும் நலவாழ்வு பலன்கள் அமலாக்கம் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு, 2014 ல் 192 பில்லியன் டாலரில் இருந்து 2019ல் 284 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. அரசின் கடன், ஜிடிபியில் 52 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக குறைந்துள்ளது.
டிஜிட்டல் புரட்சி, இந்தியாவை சர்வதேச அளவில் முன்னணி நிலையில் விவசாயம்
2022ல் விவசாயிகள் வருமானத்தை இரு மடங்க்காக்க அரசு உறுதி கொண்டுள்ளது. இதற்கு விவசாய சந்தைகளை தாராளமாக்க வேண்டும்.
தண்ணீர் சார்ந்த பிரச்சனைகள் மிகவும் முக்கியமானவை. தண்ணீர் பற்றாக்குறை மிக்க 100 மாவட்டங்களில் அரசு விரிவான நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு உதவியுடன் 20 லட்சம் விவசாயிகள் சோலார் பம்ப்கள் அமைத்துள்ளனர். விவசாயிகள் தங்கள் வறண்ட நிலப்பகுதியில் சூரிய மின்சக்தி மையம் அமைக்க உதவுவதற்கான திட்டம். இது அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும்.
அதிக ரசாயன உரம் பயன்பாட்டை மாற்றும் வகையில், பாரம்பரிய மற்றும் நவீன உர பயன்பாட்டில் சமமான தன்மையை கொண்டு அவர அரசு உறுதி காட்டும். மகளிர் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படும் கிராம சேமிப்புக் கிடங்கி திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்திய ரெயில்வே, அரசு, தனியார் கூட்டு மூலம் கிசான் ரெயில் அமைக்கும். எளிதில் அழுகக் கூடிய பொருட்களைக் கொண்டு செல்ல, எக்ஸ்பிரஸ் மற்றும் சர்க்கு ரெயில்கள் குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்படும்.
செய்தி: பிடிஐ | தமிழில் : சைபர்சிம்மன்