பெற்றோரின் தியாகத்தை நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட ஐ.எஃப்.எஸ். அதிகாரி அனுபம் சர்மா!
இந்திய வனத்துறைச் சேவை (IFS) அதிகாரி அனுபம் ஷர்மா தனது ஐ.எஃப்.எஸ். தேர்வுகளுக்கான தயாரிப்பு நாட்களில் அவரது பெற்றோர் செய்த தியாகங்கள் பற்றி இதயம் நெகிழும் வகையில் நெக்குருகக் கூறினார்.
இந்திய வனத்துறைச் சேவை (IFS) அதிகாரி அனுபம் ஷர்மா தனது ஐ.எஃப்.எஸ். தேர்வுகளுக்கான தயாரிப்பு நாட்களில் அவரது பெற்றோர் செய்த தியாகங்கள் பற்றி இதயம் நெகிழும் வகையில் நெக்குருகக் கூறினார்.
ஐ.எஃப்.எஸ் அதிகாரி அனுபம் சர்மா, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் போது தனது குடும்பத்தின் தியாகம் மற்றும் அளித்த தனித்துவமான ஆதரவு பற்றிய நெகிழ்ச்சிக் கதையைப் பகிர்ந்துள்ளார்.
சர்மா தனது அறையில் நிறுவப்பட்ட ஏர் கண்டிஷன் சாதனத்தின் படத்துடன் ஒரு நெகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு, 2014ல் அவரது பெற்றோர் வாங்கியது இந்த ஏசி மட்டுமே என்று பதிவிட்டுள்ளார்.
சுட்டெரிக்கும் வெயில் சீசனில் தன் மகன் போட்டித்தேர்வுகள் தயாரிப்பின் போது கஷ்டப்படக் கூடாது என்ற நோக்கத்தில் அவரது பெற்றோர் ஏ/சி மெஷினை அவரது படிப்பறையில் பொருத்தியுள்ளனர்.
“நடுத்தர வர்க்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக எடுக்கும் முயற்சிகளின் ஒரு தெறிப்பே இது...” என்று அனுபம் சர்மா நன்றியுடன் பதிவிட்டுள்ளார்:
“எனது பெற்றோர் இதுவரை வாங்கிய ஒரே ஏசி மெஷின் இதுதான். 10 வருடங்களுக்கு முன்பு 2014-ம் ஆண்டில் வாங்கினார்கள். சுட்டெரிக்கும் கோடைக்காலத்தின் வெக்கையில் கஷ்டப்படாமல் நான் சவுகரியமாகப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும் என்பதற்காக எனது படுக்கையறையில் இந்த ஏசியை எனது பெற்றோர் பொருத்தினார்கள். தங்களது குழந்தையின் எதிர்காலம் சிறக்க ஒரு நடுத்தர வர்க்க பெற்றோர் அன்று எடுத்த இந்த முயற்சியை இன்று நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
இந்த நெகிழ்ச்சிப் பதிவு சமூக ஊடகத்தில் பலரின் சாதகமான எதிர்வினைகளை ஈர்த்துள்ளன. பலரும் தங்கள் வீட்டில் டேபிள் ஃபேன் கூட இல்லை என்று பதிவிட்டுள்ளனர். தங்கள் குழந்தைகளின் அபிலாஷைகளை ஆதரிக்க பெற்றோர்கள் செய்த தியாகங்களுக்கு பாராட்டு தெரிவித்து பலரும் நெகிழ்ச்சியுடன் தங்கள் கதைகளையும் பதிவிட்டுள்ளனர்.
கிரிக்கெட் மைதானத்திலிருந்து ஐபிஎஸ் அதிகாரியான கார்த்திக் மதிராவின் வியத்தகு பயணம்!