Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

70 கி.மீ பயணித்து தன் கிராம மக்களுக்கு உதவிய இந்திய தடகள வீராங்கனை!

டூட்டி சந்த் புவனேஸ்வரில் இருந்து ஒடிசாவில் உள்ள தனது கிராமத்துக்குச் சென்று கிராம மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளார்.

70 கி.மீ பயணித்து தன் கிராம மக்களுக்கு உதவிய இந்திய தடகள வீராங்கனை!

Wednesday June 10, 2020 , 2 min Read

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தினக்கூலிகளும் தொழிலாளர்களும் வேலையிழந்து வாழ்வாதாரத்தைத் தொலைத்து செய்வதறியாது தவிக்கின்றனர்.


கிராமவாசிகள் அத்தியாவசியத் தேவைகள்கூட கிடைக்காமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தனிநபர்களும் நிறுவனங்களும் இவர்களது துயரத்தைப் போக்குவதற்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

1

அவ்வாறு உதவுபவர்களில் ஒருவர்தான் இந்திய தடகள வீராங்கனை டூட்டி சந்த். இவர் சுமார் 70 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சக்கா கோபால்பூர் என்கிற தனது கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளார். இந்தக் கிராமம் ஒடிசாவின் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ளது.

“ஊரடங்கு காரணமாக என் கிராம மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு என்னால் இயன்ற சிறு உதவுகளைச் செய்ய விரும்பினேன். எனவே முறையான அனுமதியைப் பெற்று என் கிராமத்திற்குச் சென்றேன். சுமார் 1,000 பேருக்கு உணவுப் பொட்டலங்களைக் கொடுத்தேன்,” என்று டூட்டி பிடிஐ-இடம் தெரிவித்துள்ளார்.

டூட்டியின் குடும்பத்தினர் கிராம மக்களிடம் இவரது வருகை குறித்து தெரிவித்துள்ளனர். மக்கள் அவரின் வீட்டிற்குச் சென்று பொருட்களை வாங்கிக்கொண்டனர். அதுமட்டுமின்றி டூட்டி நேரடியாக கிராம மக்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று சானிட்டரி பேட்களை வழங்கியுள்ளார்.


பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா டூட்டிக்கு எஸ்யூவி மஹிந்திரா பரிசு அளித்திருந்தார். டூட்டி புவனேஷ்வரில் இருந்து தனது கிராமத்தைச் சென்றடைய இந்த வாகனத்தையே பயன்படுத்தியாக தெரிவித்துள்ளார். இந்தப் பதிவை மறுட்வீட் செய்துள்ள ஆனந்த், இந்த வாகனத்தை இதைக் காட்டிலும் சிறப்பாகப் பயன்படுத்த முடியுமா என்று தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.


கிராம மக்களுக்கு உதவிய பின்னர் புவனேஷ்வர் திரும்பிய டூட்டி,

“நான் மீண்டும் கிராமத்திற்குச் சென்று மக்களுக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளேன். கிராமத்தில் சுமார் 5,000 பேர் உள்ளனர். அடுத்த முறை செல்லும்போது 2,000 உணவுப் பொட்டலங்களைக் கொண்டு செல்வேன். KIIT நிறுவனர் அச்சுதா சமந்தாவிடம் உதவி கேட்டிருந்தேன். நான் 50,000 ரூபாய் ஒதுக்கினேன். மீதி தொகையை அவர் ஏற்பாடு செய்து கொடுத்தார்,” என்று SheThePeople-இடம் தெரிவித்துள்ளார்.

கட்டுரை: THINK CHANGE INDIA