Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

செப் 21ம் தேதி சென்னையில் நடைபெறும் 'இந்திய உணவு தொழில்முனைவோர் மாநாடு' - விவரங்கள் இதோ!

இந்தியாவின் மிகப்பெரிய உணவு தொழில் மாநாடு, ’இந்திய உணவு முனைவோர் மாநாடு 2024 (Indian Foodpreneur Summit 2024) சென்னையில் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறுகிறது.

செப் 21ம் தேதி சென்னையில் நடைபெறும் 'இந்திய உணவு தொழில்முனைவோர் மாநாடு' - விவரங்கள் இதோ!

Monday September 02, 2024 , 3 min Read

இந்தியாவின் மிகப்பெரிய உணவு தொழில் மாநாடு, ’இந்திய உணவு தொழில்முனைவோர் மாநாடு 2024' (Indian Foodpreneur Summit 2024) சென்னையில் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறுகிறது. உணவு தொழில்முனைவோர், உணவு தொழில் உரிமையாளர்களுக்கு வழிகாட்டும் நோக்கம் கொண்ட இந்த மாநாட்டில், உணவு துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் பங்கேற்கின்றனர்.

இந்திய தொழில் பரப்பில் பல்வேறு துறைகள் முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், உணவுத் துறையும் வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. உணவு தொழில் பரப்பில், புதுமையான எண்ணங்களோடு பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் கவனத்தை ஈர்க்கின்றன. இளம் தொழில்முனைவோர் புதுமையாக்கத்தின் மூலம் பல்வேறு வகையான உணவு தொழில்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

food

இந்த பின்னணியில், மைபிரனர் (Mypreneur) நிறுவனம், உணவு தொழிலில் ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்தியாவின் மிகப்பெரிய உணவு தொழில் மாநாடு, ’இந்திய உணவு முனைவோர் மாநாட்டை நடத்துகிறது. சென்னையில் மனப்பாக்கத்தில் உள்ள ஃபெதர்ஸ் ஓட்டலில் செப்டம்பர் 21ம் தேதி இந்த மாநாடு நடைபெறுகிறது.

பொறியியல் பட்டதாரியும், உணவுத் துறை தொழில்முனைவோருமான மைபிரனர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ,. சுரேஷ் ராதாகிருஷ்ணன் இதன் ஒருங்கிணைப்பாளராக விளங்குகிறார்.

உணவுத்தொழில் புரிவோருக்கு வழிகாட்டுதல்

இந்தியாவின் மிகப்பெரிய உணவு தொழில் மாநாடு உணவு தொழிலில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் உணவு தொழிலை வளர்த்தெடுக்க விரும்புகிறவர்களுக்கு ஊக்கம் அளித்து வழிகாட்டும் வகையில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் வல்லுனர் வழிகாட்டுதலை பெறலாம். மேலும், முன்னணி உணவு தொழில்முனைவோரின் உரைகளை கேட்கலாம். உணவு துறையைச்சேர்ந்த 15க்கும் மேற்பட்ட முக்கியப் பேச்சாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

உணவுத் துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் குறித்து வல்லுனர்களின் விவாதம் மற்றும் உரையாடல்கள் வழிகாட்டுதலாக அமையும். வர்த்தக வளர்ச்சிக்கான எண்ணங்களை இதன் மூலம் பெறலாம்.

சிறப்புப் பேச்சாளர்கள்

இந்த மாநாட்டில், ஸ்டார்ட் அப் டி.என் திட்ட இயக்குனர் சிவராஜா ராமநாதன், ஏ2பி நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாச ராஜா, நேச்சுரல்ஸ் சி.இ.ஓ., சிகே.குமர்வேல், மைபிரனர் நிறுவனர் சுரேஷ் ராதாகிருஷ்ணன், ஐசக் நாசர், மன்னா ஃபுட்ஸ் நிறுவனர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசுகின்றனர்.

மாநாட்டில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த உள்ள மற்ற முன்னணி வல்லுனர்கள் வருமாறு:

சதீஷ் தனபாலன், தலப்பாகட்டி ஓட்டல்ஸ், நிர்வாக இயக்குனர்.

தருண் மகாதேவன், அட்வாண்டேஜ் புட்ஸ் இயக்குனர்

சுகுமாரன் நாகராஜன், அனில் புட்ஸ் செயல் இயக்குனர்.

ஸ்வேத்தா ரவி, ஆர்.என்.ஆர் பிரியாணி, இணை நிறுவனர்,

மோசஸ், ஆலடிபட்டியான கருப்பட்டி காபி, இணை நிறுவனர்,

ஆதித்யன்.வி.எஸ், குக்ட், சி.இ.ஓ.

காந்தினி விஜயகுமார், ஓல்ட் மிர்சி பிரியாணி, இணை நிறுவனர்

மல்லிகா ராஜ்குமார், எவர்குரோத் அகாடமி நிறுவனர்.

தரணீதரன் , சோஷியல் ஈகிள் நிறுவனர்,

சக்திவேல் பன்னீர்செல்வம், கொரில்லா மார்க்கெட்டர்.

ஸ்வஸ்திக் நந்தகுமார், வர்த்தக வல்லுனர்.

கார்த்திகேயன் செல்வராஜ், டன்கல் கிச்சன் நிறுவனர்.

ஏன் பங்கேற்கவேண்டும்?

இந்த மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் உணவு துறையில் உள்ளவர்கள் பல்வேறு பலன்களை பெறலாம். ஊக்கம் தரும் எண்ணங்களை பெறுவதோடு, ஒரே குடையின் கீழ் துறை சார்ந்த முனைவோர் மற்றும் வல்லுனர்களை சந்திக்கலாம். வலைப்பின்னல் வாய்ப்புகளை பெறவும் இது உதவும்.

Suresh Radhakrishnan

சுரேஷ் ராதாகிருஷ்ணன்

"முன்னணி தொழில்முனைவோர்கள் மற்றும் வல்லுனர்களிடம் இருந்து வர்த்தக வளர்ச்சி வாய்ப்புகள், உத்திகளை கற்றுக்கொண்டு, உணவுத் துறை சார்ந்த வாய்ப்புகள் மற்றும் கூட்டு முயற்சிக்கான வாய்ப்புகலை பெறமுடியும்," என்று இந்த மாநாட்டை முன்னின்று நடத்தும் சுரேஷ் ராதகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்த மாநாடு யாருக்கு?

உணவு தொழிலில் ஆர்வம் கொண்டவர்கள், உணவு தொழில் துவக்கும் எண்ணம் கொண்டவர்கள் இந்த ஒரு நாள் மாநாட்டில் பங்கேற்கலாம். கபே மற்றும் டீக்கடை உரிமையாளர்களும் பங்கேற்கலாம்.

உணவகங்கள் நடத்தி வருபவர்கள், கிளவுட் கிச்சன் வைத்திருப்பவர்கள் வளர்ச்சி வாய்ப்பு பற்றி அறியலாம். வீட்டில் பேக்கிங் செய்பவர்கள், இல்ல உணவு முனைவோர்கள் இதில் பங்கேற்று பயன்பெறலாம்.

யுவர்ஸ்டோரி தமிழ், மீடியா பார்ட்னராக உள்ள இந்த உணவு மாநாடு, இத்துறையில் ஆர்வம் கொண்டவர்களுக்கான நல்ல வாய்ப்பாகும். ஆர்வம் உள்ளவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். மூன்று விதமான கட்டணங்கள் உள்ளன.

பதிவு மற்றும் தகவல்களுக்கு: https://theindianfoodpreneursummit.com/   


Edited by Induja Raghunathan