மும்பை குடிசையில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை படைத்த ஹுசைன் சயீத்தின் வெற்றிக்கதை!
மும்பை நகரின் பரந்து விரிந்து கிடக்கும் வாடி பண்டரின் பகுதியில் இருந்து விடாமுயற்சி மற்றும் வெற்றி அசாதாரண கதையாக வடிவம் பெற்றுள்ளது.
மும்பை நகரின் பரந்து விரிந்து கிடக்கும் வாடி பண்டரின் பகுதியில் இருந்து விடாமுயற்சி மற்றும் வெற்றி அசாதாரண கதையாக வடிவம் பெற்றுள்ளது.
2022 ஆம் ஆண்டு யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று, அகில இந்திய பட்டியலில் 570வது ரேங்க் பெற்ற 27 வயது ஹுசைன் சயீத்தின் கதை உத்வேகமூட்டுவதாக அமைய மற்றொரு காரணமும் உள்ளது.
மும்பை வாடி பண்டரில் அமைந்துள்ள ஒற்றை அறையில் பெற்றோர் மற்றும் சகோதரிகளுடன் வசித்து வருகிறார். ஹுசைன் சயீத்தின் தந்தை ரம்ஜான் இந்திரா துறைமுகத்தில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் பெரிதாக படிக்கவில்லை என்றாலும் தனது மகனை ஐ.ஏ.எஸ். அதிகாரியாக்க வேண்டும் என விரும்பினார். தனது கடின உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தை மகனின் படிப்பிற்காக செலவிட்டார்.
கல்வி பயணம்:
உமர்கடியில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் எஸ்எஸ்சி படிப்பையும், சிஎஸ்டிக்கு அருகிலுள்ள அஞ்சுமன்-ஐ-இஸ்லாம் பள்ளியில் 12ம் வகுப்பையும் வெற்றிகரமாக நிறைவு செய்த ஹுசைன் சயீத், எல்பின்ஸ்டோன் கல்லூரியில் வணிகத்தில் பட்டம் பெற்றேன்.
“நான் சிவில் சர்வீஸுக்கு முயற்சிக்க வேண்டும் என்று எனது தந்தை விரும்பினார். நான் கல்லூரியில் நுழைவதற்கு முன்பு அதைப் பற்றி கேள்விப்பட்டதில்லை, ஆனால் அதனை எனது கனவாக மாறிக்கொண்டேன்.”
தந்தையின் ஆசைக்காக ஐ.ஏ.எஸுக்கு படிக்க ஆரம்பித்தார். வீட்டில் போதுமான இடவசதி இல்லாததால் பூங்காங்கள், தோட்டங்கள், நூலகங்களில் படிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர், தான், ஹஜ் ஹவுஸ் பயிற்சி மற்றும் வழிகாட்டல் மையத்தில் பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது.
சிறந்த மாணவரான அவருக்கு அரசு உதவித்தொகை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடமிருந்து மானியங்களைப் பெற்றார்.
“எனது முதல் சிவில் சர்வீஸ் தேர்வை முடித்த கையோடு, வருமானத்திற்காக சில பயிற்சி மையங்களில் வகுப்பெடுக்க ஆரம்பித்தேன்,” என்கிறார்.
அவரது கடின உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் பலனளிக்கும் விதமாக 2022 ஆம் ஆண்டு யூபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று, அகில இந்திய பட்டியலில் 570வது ரேங்க் பெற்றார். இதன் மூலம் சயீத் ஒரு ஐபிஎஸ் அல்லது ஐஆர்எஸ் பதவியைப் பெறுவார் எனக்கூறப்படுகிறது.
தகவல் உதவி - டிஎன்ஏ இந்தியா
‘பஸ் வசதியே இல்லாத குக்கிராமத்தின் முதல் ஐஏஎஸ்’ - யுபிஎஸ்சி தேர்வில் வென்ற விவசாயி மகள்!