சிறுதொழில் நிறுவனங்கள் தொழில் நுட்பத்தை பயன்படுத்த ஊக்குவிக்க ‘Tech Saksham’ திட்டம்!
இந்தியாவில் எம்.எஸ்.எம்.இ துறை நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை தழுவிக்கொள்ள வழி செய்யும், ’டெக் சாக்ஷம்’ ‘Tech Saksham' எனும் மூன்று ஆண்டு திட்டத்தை இந்திய தொழிலக கூட்டமைப்புடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Msme) துறை அமைச்சரான நிதின் கட்காரி, இந்தியாவில் எம்.எஸ்.எம்.இ துறை நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை தழுவிக்கொள்ள வழி செய்யும், ’டெக் சாக்ஷம்’ ‘Tech Saksham' எனும் மூன்று ஆண்டு திட்டத்தை இந்திய தொழிலக கூட்டமைப்புடன் இணைந்து அறிமுகம் செய்துள்ளார். .
எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் உள்ள இடைவெளியை போக்குவது இத்திட்டத்தின் நோக்கம். இதன் மூலம், அவை சர்வதேச அளவில் போட்டி மிக்கதாக இருக்க ஊக்குவிப்பதோடு, நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கும் பங்களிப்பு செலுத்தி, செலவையும் குறைக்க முடியும்.
எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் உள்ள, தொழில்நுட்ப சேவைகள் விலை அல்லது பராமரிப்பு தொடர்பான விழிப்புணர்வு, தொழில்நுட்ப செயல்பாட்டிற்கான வளங்கள், ஊழியர்கள், முதலீட்டின் மீதான பலன் உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ள உதவும் இந்த திட்டத்தில், டெல், எச்.பி, இண்டெல், வோடோபோன் ஐடியா, வாட்ஸ் அப், யெஸ் பாங்க் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்துள்ளன என்று அமைச்சக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
இந்த திட்டம் 10,000 எம்.எஸ்.எம்.இ நிறுவனங்கள் மீது தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம், நிதின் கட்காரி, சிறு தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கான பாரத்கிராப்ட் எனும் இ-காமர்ஸ் போர்டலை அறிமுகம் செய்தார்.
இந்த போர்டல், இரண்டு ஆண்டுகளில் ரூ.10 லட்சம் விற்றுமுதலை ஈட்டும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
“நாட்டின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றும் எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு இது அருமையான வாய்ப்பாக அமையும் என்று” அவர் மக்களவையில் கேள்விநேரத்தின் போது தெரிவித்தார்.
'psbloansin59minutes' போர்டல் மூலம் வங்கிகள், 36,000 கடன் வழங்கியிருப்பதகாவும் அவர் தெரிவித்தார்.
“கடன் வழங்குவதற்கான நேரத்தை குறைப்பது தான் நோக்கம்,“ என்றும் தெரிவித்தார்.
எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கான கடன்களை பொருத்தவரை, இந்தத் துறைக்கான வங்கிகள் கடன் 2017ல் ரூ.10.70 லட்சம் கோடியில் இருந்து 2019 மார்ச்சில் ரூ.14.97 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றார்.
எம்.எஸ்.எம்.இ துறை வளர்ச்சிக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆங்கில கட்டுரையாளர்: பலக் அகர்வால் | தமிழில்: சைபர்சிம்மன்