Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

இந்தியாவின் 48வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமித்தார் ஜனாதிபதி!

ஏப்ரல் 24ம் தேதி பதவி ஏற்பார்!

இந்தியாவின் 48வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமித்தார் ஜனாதிபதி!

Wednesday April 07, 2021 , 2 min Read

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை நீதிபதி என்.வி.ரமணாவை இந்தியாவின் 48வது தலைமை நீதிபதியாக நியமித்தார்.


அதன்படி, தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நாட்டின் தலைமை நீதிபதியாக ஒரு வருடம் மற்றும் நான்கு மாதங்கள் அதாவது ஆகஸ்ட் 26, 2022 வரை பணியாற்றுவார். தற்போது உச்சநீதிமன்ற நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் போப்டே, ஏப்ரல் 23ம் தேதியுடன் ஓய்வுபெற இருக்கின்ற நிலையில் பாப்டே தான் தனக்கு அடுத்தபடியாக மூத்த நிதியபதியான என்.வி.ரமணாவை இந்தியாவின் 48வது தலைமை நீதிபதியாக பரிந்துரைத்துள்ளார்.


அந்தப் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்.வி.ரமணாவை இந்தியாவின் 48 வது தலைமை நீதிபதியாக நியமித்து இருக்கிறார். கிருஷ்ணா மாவட்டம் பொன்னவரம் கிராமத்தில் ஆகஸ்ட் 27, 1957ல் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ரமணா, பிப்ரவரி 10, 1983 அன்று வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

நீதிபதி

ஆந்திர மாநில உயர்நீதிமன்றம், மாநில மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாயங்கள் மற்றும் சிவில், குற்றவியல், அரசியலமைப்பு, தொழிலாளர், சேவை மற்றும் தேர்தல் விஷயங்களில் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய ரமணா, அரசியலமைப்பு, குற்றவியல், சேவை மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நதிச் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.


ஜூன் 27, 2000 அன்று, ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக ரமணா நியமிக்கப்பட்டார். உண்மையில், அவர் ஹைதராபாத்தில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மத்திய அரசின் கூடுதல் நிலை ஆலோசகராகவும், ரயில்வேயின் நிலையான ஆலோசகராகவும் செயல்பட்டார்.


ஆந்திராவின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும், ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் மார்ச் 10, 2013 முதல் மே 20, 2013 வரை செயல்பட்டுள்ளார்.

நீதிபதி

உச்சநீதிமன்ற நீதிபதியாக, ரமணா தேர்தல் பிரச்சினைகள், பெண்களின் உரிமைகள் மற்றும் சி.ஜே.ஐ.யின் முடிவை ஆர்டிஐ வரம்பிற்குள் கொண்டுவருவது போன்ற பல்வேறு முக்கியமான முடிவுகளின் ஒரு பகுதியாக இருந்தார்.


அண்மையில், ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அளித்த புகாரை உச்சநீதிமன்றம் கலைத்து, அரசியல் ரீதியாக முக்கியமான வழக்குகளில் நீதிபதி ரமணா மாநில நீதித்துறையுடன் ரமணா மீது குற்றம் சுமத்தப்பட்டதுதான் அந்த புகார். ஒரு உள் விசாரணைக்குப் பிறகு, ஆந்திர முதல்வரின் குற்றச்சாட்டை தகுதியற்றது என்று உச்ச நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.