பிரபல நடிகை காஜல் அகர்வால் கேமிங் நிறுவனத்தில் முதலீடு!
கேமிங் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பிரபல நடிகை காஜல் அகர்வால், மேலும் பல பெண்கள் இத்துறைக்கு வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
’ஓகி கேமிங்’ (Okie Gaming) ஸ்டார்ட் அப் நிறுவனத்தில், பிரபல நடிகை காஜல் அகர்வால் முதலீடு செய்து 15 சதவீத பங்குகளை பெற்றுள்ளதாகவும், நிறுவனத்தில் பங்குதாரராகி இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிதியை, கேம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பயன்படுத்திக்கொள்ள இருப்பதாகவும், இந்த நிதியாண்டுக்குள் ரூ.50 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
"கேமிங் துறை செழித்துக்கொண்டிருக்கிறது. இத்துறையில் அங்கம் வகிக்க இது சரியான நேரம். நான் எப்போதுமே ஈடுபாடு மிக்க கேமராக இருந்திருக்கிறேன். இந்தியாவில் பெண் கேமர்களுக்கு புதிய பாதைகள் திறக்கப்படுவதற்கு தாக்கம் செலுத்த விரும்புகிறேன்,” என்று நடிகை காஜல் அகர்வால் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்திய உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக உள்ள காஜல் அகர்வால், 2004ல் பாலிவுட்டில் அறிமுகமானார். அவரது முதல் திரைப்படமான லக்ஷ்மி கல்யாணம் தெலுங்கில் 2007ல் வெளியானது. மகதீரா, சிங்கம் உள்ளிட படங்களில் நடித்துள்ளார்.
ஒகி கேமிங், ஸ்மார்ட் ஹவுசி, ஃபேண்டஸி கிரிக்கெட், ஸ்மார்ட் நம்பர் குவிஸ், லூடோ, கிரிக்கெட், ரம்மி உள்ளிட்ட கேம்களை கொண்டுள்ளது. எல்லாமே பணம் சம்பாதிக்க வழி செய்யும் விளையாட்டுகள். தற்போது இணையதள வடிவில் செயல்பட்டு வரும் நிலையில், விரைவில் செயலி வடிவிலும் அணுக வழி செய்யப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிராந்திய விளையாட்டுகளான படகு போட்டி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும், தேசி ஸ்போர்ட்ஸ் லீக் வசதியையும் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. நடிகை காஜல் அகர்வால், கேமிங் துறையில் ஆர்வம் காட்டுவது இத்துறையில் பெரிய தாக்கம் செலுத்தும் என, ஒகி கேமிங் நிறுவனத்தின் தாய் நிறுவனமான, ஒகி வென்சர்ஸ் சி.இ.ஓ ஜிடின் மஸந்த் கூறியுள்ளார்.
"ஒகி கேமிங் நிறுவனத்திற்கு தனித்தன்மை வாய்ந்த எண்ணங்கள் மற்றும் உள்ளொளியைக் கொண்டு வரும் ஈடுபாடு மிக்க முதலீட்டாளராக காஜல் திகழ்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நிறுவனம், அடுத்த ஆண்டு மார்ச் மாத வாக்கில் ரூ.50 கோடி வருவாயை இலக்காகக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
"எந்த ஒரு கட்டத்திலும் எங்கள் மேடையில் ஒரு லட்சம் பயனாளிகளை பெற்றிருக்க விரும்புகிறோம். பயனாளிகள் ரூ.10 முதல் ரூ.25க்கு விளையாடி ரூ.5,000 வரை சம்பாதிக்கலாம். சூதாட்ட வகை கேம்களில் இருந்து விலகி இருப்போம்,’ என்றும் அவர் கூறினார்.
தங்கள் மேடையில் ஐந்து கேம்கள் இருப்பதாகவும், ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய கேமை அறிமுகம் செய்ய இருப்பதகாவும் அவர் தெரிவித்தார்.
நிறுவனம், தனது மேடையில் ஏற்கனவே ரூ.5 கோடி முதலீடு செய்துள்ளது. பிப்ரவரி மாதம் இதே அளவு தொகையை முதலீடு செய்ய உள்ளது. ஊழியர்கள் எண்ணிக்கையையும் அதிகரிக்க உள்ளதாக மஸந்த் கூறியுள்ளார்.
இந்திய கேமிங் துறை தற்போது 930 மில்லியன் டால மதிப்பு கொண்டதாக உள்ளது. ஆண்டுக்கு 41 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. 2024ல் இத்துறை 3,750 டாலர் மதிப்பு கொண்டதாக இருக்கும் என கருதப்படுகிறது.
தகவல்: பிடிஐ