LinkedIn நிறுவனத்தின் ‘கண்ட்ரி மேனேஜர்’ ஆனார் குமரேஷ் பட்டாபிராமன்!
லிங்க்ட்இனில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த பட்டாபிராமன், முன்னதாக நிறுவனத்தின் தயாரிப்பு, ஃபீடு, தேடல் மற்றும் ஜெனரேட்டிவ் AI தயாரிப்புகளின் மூத்த இயக்குநராக இருந்தார்.
லிங்க்டுஇன் நிறுவனத்தின் ‘கண்ட்ரி மேனேஜர்’ மற்றும் ‘புரோடக்ட் ஹெட்’ பொறுப்பிற்கு குமரேஷ் பட்டாபிராமன் நியமிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக குமரேஷ் பட்டாபிராமன் தன் லிங்க்டு இன் போஸ்ட்டில் கூறியிருப்பதாவது,
“135 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களுடன், லிங்க்ட்இனின் இரண்டாவது பெரிய வளர்ந்து வரும் சந்தையாக இந்தியா உள்ளது - லிங்க்ட்இன் வேலைவாய்ப்புகளுக்கான தளமாக இருந்திலிருந்து தற்போது வேலைவாய்ப்புகளுக்காகவும் கற்றல், நெட்வொர்க்கிங் மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றிற்காக தொழில் வல்லுநர்கள் இணையும் ஆற்றல்மிக்க உலகளாவிய சமூகமாக மாறியுள்ளது,” என்றார்.
லிங்க்ட்இனில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த பட்டாபிராமன், முன்னதாக நிறுவனத்தின் தயாரிப்பு, ஃபீட், தேடல் மற்றும் ஜெனரேட்டிவ் AI தயாரிப்புகளின் மூத்த இயக்குநராக இருந்தார். 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ள பட்டாபிராமன் லிங்க்ட்இனில் சேர்வதற்கு முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார்.
வேகமாக வளர்ந்து வரும் AI திறன் கொண்ட முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் உலக அளவில் செயற்கை நுண்ணறிவு திறன் ஊடுருவலையும் உலக சராசரியைக் காட்டிலும் செயற்கை நுண்ணறிவுத் திறன் பயன்பாட்டில் மூன்று மடங்கு அதிகமுள்ள நாடு இந்தியா என்றும் புகழாரம் சூட்டினார்.
இது இந்தியாவை எதிர்காலப் பணிகளில் முன்னணியில் நிறுத்துகிறது, மேலும், உலகத்திற்காக இந்தியாவின் திறன்களைக் கட்டமைக்க வாய்ப்புகளை வழங்கியுள்ளது, என்கிறார் குமரேஷ் பட்டாபிராமன்.
லிங்க்ட்இன் நிறுவனத்தின் மூத்த நிர்வாகியான பட்டாபிராமன் புதுமைகளை உருவாக்கவும், வலுவான கூட்டாண்மைகளை உருவாக்கவும், ஒவ்வொரு இந்திய நிபுணருக்கும் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கவும் இந்தியக் குழுவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளதாகக் கூறினார்.