Stock News: பங்குச்சந்தை நிலவரம் - தொடக்கத்தில் சரிந்து மீண்ட சென்செக்ஸ், நிப்டி!
நிப்டி பேங்க் குறியீடு இன்று 169 புள்ளிகளும் நிப்டி ஐடி குறியீடு 140 புள்ளிகளும் உயர்ந்து காணப்பட பிஎஸ்.இ ஸ்மால் கேப் சுமார் 359 புள்ளிகள் சரிவுடன் காணப்படுகின்றன.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று வியாழக்கிழமை (18-07-2024) தொடக்கத்தில் சரிந்து பிற்பாடு சற்று முன் சற்றே உயர்வு கண்டன. சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடக்கத்தில் 194 புள்ளிகள் சரிந்து பிறகு, இப்போது 142 புள்ளிகள் உயர்ந்து காணப்படுகிறது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சற்று முன் நிலவரப்படி, 142.07 புள்ளிகள் உயர்ந்து 80,858.62 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 28.50 புள்ளிகள் உயர்ந்து 24,641.50 புள்ளிகளாகவும் இருந்தன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று 169 புள்ளிகளும் நிப்டி ஐடி குறியீடு 140 புள்ளிகளும் உயர்ந்து காணப்பட பிஎஸ்.இ ஸ்மால் கேப் சுமார் 359 புள்ளிகள் சரிவுடன் காணப்படுகின்றன.
செக்டார்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு பங்குகள் நீங்கலாக, ஐடி, பொதுத்துறை வங்கிகள் பங்குகள் சரிவு கண்டுள்ளன. ஆட்டோமொபைல், கேப்பிடல் குட்ஸ், ரியல் எஸ்டேட், மீடியா பங்குகளும் சரிவு கண்டுள்ளன.
காரணம்:
மத்திய பட்ஜெட் தாக்கல் நெருங்கி வருவதால் பட்ஜெட் முன்மொழிவுகளை எதிர்பார்த்து பங்குச் சந்தையில் சற்றே ஏற்றமும் சற்றே தாழ்வுமாக மாறி மாறி இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஓ .என். ஜி.சி
இறக்கம் கண்ட பங்குகள்:
பஜாஜ் ஆட்டோ
ஏஷியன் பெயிண்ட்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று மாறாமல் டாலர் ஒன்றுக்கு இன்று ரூ.83.59ஆக உள்ளது.