இந்தியாவில் மின்வாகனச் சூழலை மேம்படுத்த Epsilon குழுமத்துடன் கைகோர்க்கும் எம்ஜி மோட்டார் இந்தியா!
இந்தியாவில் மின்வாகன சார்ஜிங் வசதியை மற்றும் மின்வாகன சூழலை மேம்படுத்துவது தொடர்பான தனது ஈடுபாட்டை வலியுறுத்தும் வகையில், எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், எப்சிலான் குழுமத்திடன் கூட்டு ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
இந்தியாவில் மின்வாகன சார்ஜிங் வசதியை மற்றும் மின்வாகன சூழலை மேம்படுத்துவது தொடர்பான தனது ஈடுபாட்டை வலியுறுத்தும் வகையில், எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் (MG Motor), எப்சிலான் (Epsilon) குழுமத்திடன் கூட்டு ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
இந்த கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, எம்ஜி மோட்டார் இந்தியா, எப்சிலான் குழும துணை நிறுவனங்கள், பவர் இவி (Power EV) மற்றும் லைகோ (LICO) ஆகியவற்றுடன் சார்ஜிங் தீர்வுகள், பேட்டரி மறுசுழற்சிக்காக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதன் மூலம், சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் பேட்டரி சுழற்சி மேலாண்மையில் தனது ஈடுபாட்டை உறுது செய்வதாக எம்ஜி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
பவர் இவி, பலவகையான ஏசி மற்றும் டிசி சார்ஜர்களை வழங்குகிறது. 22kW - 120kW சார்ஜிங் வேகம் கொண்ட இவை, பவர்பேனல் நிர்வாக மென்பொருளோடு சார்ஜிங் நிலையை பயன்பாட்டை மேம்படுத்துகிறது.
இந்த ஒப்பந்தத்தின்படி, பவர் இவி, எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவன மின்வாகனங்களுக்கு சார்ஜிங் தீர்வுகளுக்கான ஏசி மற்றும் டிசி சார்ஜிங் சேவைகளை வழங்கும். இந்தியா முழுவதும், குடியிருப்புகள், குடியிருப்பு சமூகங்களில் 1000 நாட்களில் 1000 சார்ஜிங் மையங்களை அமைக்கும் எம்ஜி இந்தியா திட்டத்தின் மூலம், எசி சார்ஜர்கள் வாய்ப்புகள், டிசி சார்ஜிங் அறிமுகம் வசதி வாயிலாக தற்போதுள்ள பொது சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்த உள்ளது.
மேலும், இந்த ஒப்பந்தம், பவர் இவி நிறுவனத்தின் புதுமையான, அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்டு எம்ஜி மோட்டார் இந்தியாவின் புதிய மின்வாகன மாதிரிகளுக்கான பிரத்யேக சார்ஜிங் தொழில்நுட்பத் தீர்வுகள் வழங்கப்படும்.
லைகோ, பேட்டரி சுழற்சிக்கு, மறுசுழற்சி மற்றும் புதுபிப்பு மூலம் லித்தியம், கோபால்டு, நிக்கல் ஆகியவற்றை மறுபயன்பாட்டுக்கு கொண்டு வந்து நீடித்த தன்மைக்கு உதவுகிறது. இரண்டு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் பேட்டரி மறுபயன்பாட்டிற்கான உத்திகளை பின்பற்றும். மேலும் ஆய்வு கூட்டு மூலம், மறுசுழற்சி செயல்திறனை மேம்படுத்தும் நீடித்த தன்மை அமைப்பை உருவாக்கும்.
“இந்தியாவில் செயல்பாடுகளை துவக்கியது முதல் எம்ஜி மோட்டார் இந்தியா நீடித்த தன்மையில் கவனம் செலுத்து வருகிறது. இந்தியாவில் துடிப்பான மின்வாகன சூழலுக்கு உதவி வருகிறது. எப்சிலான் குழுமத்துடனான எங்கள் ஒப்பந்தம், மேம்பட்ட சார்ஜிங் சூழலை உருவாக்குவதை மற்றும் பேட்டரி சுழற்சியில் உதவுவதை நோக்கமாகக் கொண்டது,“ என நிறுவன முதன்மை வளர்ச்சி அதிகாரி கவுரவ் குப்தா கூறியுள்ளார்.
“பசுமை போக்குவரத்தை ஏற்கச்செய்வது, சுழற்சி பொருளாதாரக் கோட்பாடு ஆகியவற்றில் எங்களது பயணத்தின் முக்கிய மைல்கல்லாக இந்த ஒப்பந்தம் அமைகிறது,” என எப்சிலான குழும நிர்வாக இயக்குனர் விக்ரம் ஹண்டா கூறியுள்ளார்.
“இந்த கூட்டு முயற்சி இந்தியாவில் மின் வாகன சார்ஜிங் பரப்பை மேம்படுத்தி, மின்வாகன போக்குவரத்து வசதியை மேலும் பரவலாக்க உதவும் என்று பவர் இவி., சி.இ.ஓ பென்னி பரிஹார் கூறியுள்ளார்.
இந்த கூட்டு மூலம் இந்தியாவில் சுழற்சி பொருளாதாரத்திற்கான புதிய தரத்தை உருவாக்க இருப்பதாக லைகோ மெட்டிரியல்ஸ் சி.இ.ஓ கவுரவ் டோவானி கூறியுள்ளார்.
மின்வாகனத் துறையில் துவக்கத்தில் நுழைந்த நிறுவனம் என்ற முறையில் எம்ஜி மோட்டார் இந்தியா, மின்வாகன சூழலை மேம்படுத்துவதோடு, புதிய வாகனங்களையும் அறிமுகம் செய்துவருகிறது. இந்த கார் தயாரிப்பு நிறுவனம் தேசிய அளவில் 15,000 சார்ஜிங் மையங்களை அமைத்துள்ளது. 500 நாட்களில் 500 சார்ஜிங் மையங்களை அமைத்துள்ள நிறுவனம், விரைவில் 1000 மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்திற்காக நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
Edited by Induja Raghunathan