Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் - ரூ.900 கோடிக்கு புதிய முதலீடுகள்; 4,100 புதிய வேலை வாய்ப்புகள் பெற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தின் முதல் நாளான இன்று சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் நோக்கியா, பேபால் உள்ளிட்ட 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம் - ரூ.900 கோடிக்கு புதிய முதலீடுகள்; 4,100 புதிய வேலை வாய்ப்புகள் பெற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

Friday August 30, 2024 , 2 min Read

தமிழ் நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலீட்டாளர்களைச் சந்திக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில், முதல் நாளான இன்று சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் நோக்கியா, பேபால் உள்ளிட்ட 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார் ஸ்டாலின்.

Stalin US Mou

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் ரூ.900 கோடிக்கும் அதிகமான பாதுகாப்பான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக பல துறைகளில் 4,100 புதிய வேலைவாய்ப்புகளும் கிடைக்க உள்ளது.

மைக்ரோசிப் – ₹250 கோடி, 1,500 வேலைகள்

நோக்கியா – ₹450 கோடி, 100 வேலை வாய்ப்புகள்

பேபால் – 1,000 வேலைகள்

ஈல்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ் – ₹150 கோடி, 300 வேலைகள்

இன்ஃபிங்க்ஸ் – ₹50 கோடி, 700 வேலைகள்

அப்ளைடு மெட்டீரியல்ஸ் – 500 வேலைகள்

இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், இந்த வேகத்தை தொடர்ந்து தீவிரப்படுத்தி, அதிக முதலீட்டாளர்களை தமிழ்நாட்டிற்கு ஈர்த்து, டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி எங்கள் பயணத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்! என பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டை, 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர்கள் பொருளாதாரமாக முன்னேற்ற ஸ்டாலின் அரசு நிர்ணயித்துள்ளது. அதற்கான முன்னெடுப்புகளே இத்தகைய முதலீட்டு ஈர்ப்பு முயற்சிகள் ஆகும்.

Stalin US visit

நோக்கியா உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம்:

சென்னையில் நோக்கியா நிறுவனம் பன்னாட்டு விநியோக மையம் மற்றும் உற்பத்தி நிலையத்தை நிறுவிச் செயல்பட்டு வருகிறது. இப்போதைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி,

ரூ.450 கோடி முதலீட்டில் 100 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்திடும் வகையில் சிறுசேரி சிப்காட்டில் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே போல், மைக்ரோ சிப் நிறுவனத்துடன் ரூ.250 கோடியில் 1500 வேலை வாய்ப்புகளுக்கான புரிந்துணர்வும் இன்ஃபிங்ஸ் நிறுவனத்துடன் ரூ.50 கோடியில் 700 வேலைகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் ஸ்டாலின் மேற்கொண்டார்.

அதே போல், அமெரிக்க பன்னாட்டு நிதித் தொழில்நுட்ப நிறுவனமான பேபால் ஏற்கெனவே சென்னையில் 2500க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இப்போதைய புரிந்துணர்வு ஒப்பந்தம் 1000 பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வண்ணம் செயற்கை நுண்ணறிவிற்கான மேம்பட்ட வளர்ச்சி மையம் உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதே பொல், ஈல்ட் இஞ்ஜினியரிங் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ரூ.150கோடி முதலீட்டில் 300 வேலை வாய்ப்புகளுக்கான புரிந்துணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.