இந்திய கேமர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!
கேமிங் துறை தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி சில முன்னணி இந்திய விளையாட்டாளர்களுடன் உரையாடினார் என்று பாஜக தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் அமித் மால்வியா தெரிவித்தார்.
கேமிங் துறை தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி சில முன்னணி இந்திய விளையாட்டாளர்களுடன் உரையாடினார் என்று பாஜக தகவல் தொழில்நுட்பத் துறைத் தலைவர் அமித் மால்வியா தெரிவித்தார்.
கேமர்களுடன் பிரதமர் மோடி மேற்கொண்ட உரையாடலின் ஒரு சிறிய வீடியோவை X (முன்பு டுவிட்டர்) தளத்தில் பகிர்ந்த மால்வியா, கேமிங் துறையில் "புதிய முன்னேற்றங்கள்" மற்றும் இந்தியாவில் கேமிங் துறையை ஊக்குவிக்கும் விளையாட்டாளர்களின் படைப்பாற்றலை மோடி அரசு எவ்வாறு அங்கீகரித்துள்ளது என்பதைப் பற்றி விவாதித்ததாக கூறினார்.
மேலும், கேமிங் துறையில் பெண்கள் பங்கேற்பு பற்றி விவாதிக்கும் போது சூதாட்டத்திற்கும் விளையாட்டிற்கும் உள்ள வித்தியாசங்களையும் பிரச்சனைகளையும் விவாதித்துள்ளதாக மால்வியா மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாஜக தலைவர் மால்வியா கூறியதாவது,
"பிரதமர் நரேந்திர மோடி 'கேமிங் உரையாடலை மேற்கொண்டார் மேலும் அவர் தீர்த் மேத்தா, பயல் தாரே, அனிமேஷ் அகர்வால், அன்ஷு பிஷ்ட், நமன் மாத்தூர், மிதிலேஷ் படன்கர், கணேஷ் கங்காதர் போன்ற சிறந்த இந்திய கேமர்களுடன் பி.சி. மற்றும் வி.ஆர். கேம்களை விளையாடினார்."
கேமிங் துறையில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் மற்றும் இந்தியாவில் கேமிங் துறையை ஊக்குவிக்கும் விளையாட்டாளர்களின் படைப்பாற்றலை மோடி அரசு எவ்வாறு அங்கீகரித்துள்ளது என்பது குறித்தும் அவர்கள் விவாதித்தனர். கேமிங்கில் பெண்கள் பங்கேற்பதைப் பற்றி விவாதிக்கும் போது, சூதாட்டத்திற்கும் கேமிங்கிற்கும் உள்ள தொடர்பு பற்றிய பிரச்சனைகளையும் அவர்கள் விவாதித்தனர்.
இந்த முழு உரையாடல் விரைவில் வெளியாகும், என்றார் பாஜக தலைவர் மால்வியா.