'இங்கிலாந்து அரசக் குடும்பத்தின் முதுகெலும்பு அவர்' - இளவரசர் பிலிப் நினைவலைகள்!
99 வயதில் காலமான இளவரசர் பிலிப்!
பிரிட்டன் இளவரசரும், 2ம் எலிசபெத் ராணியின் கணவருமான எடின்பர்க் கோமகன் பிலிப் இன்று தனது 99 வயதில் காலமானார். இதனை பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த நிலையில், கடந்த ஜனவரியில் ராணி எலிசபெத், பிலிப் இருவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். பிலிப்பின் மறைவு 94 ஆண்டுகால அரசk குடும்பத்துக்கு மாபெரும் இழப்பு. பிலிப் மறைவுச் செய்தியால் ஒட்டுமொத்த இங்கிலாந்தும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
ராணி எலிசபெத்தின் வலிமை!
டென்மார்க் அரசக் குடும்பத்தில் கடந்த 1921-ம் ஆண்டு, கோர்பு எனும் தீவில் இளவரசர் பிலிப் பிறந்தார். பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து என வெளிநாடுகளில் நாடுகளில் கல்வி பயின்ற பிலிப், தனது 18-வது வயதில் அதாவது 1939ம் ஆண்டில் பிரிட்டன் கடற்படையில் தன்னை இணைத்துக்கொண்டார்.
ஆனால் அதற்கு முன்னதாகவே, 1934ல் முதல் முறையாக ராணி எலிசபெத்தை தனது 13வது வயதில் பிலிப் சந்தித்துவிட்டார். அப்போது இருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்களின் நட்பு பின்னாளில் திருமண பந்தத்தில் முடிந்தது. 1939ல் 2-ம் உலகப்போர் நடந்தபோது ராணி எலிசபெத், பிலிப் இடையே பேச்சுவார்த்தைகள், சந்திப்புகள் அடிக்கடி நிகழ்ந்தாகக் கூறப்படுகிறது.
இந்தப் போர் முடிந்தபின் 1947-ல் எலிசபெத்தை, பிலிப் திருமணம் செய்தார். திருமணத்துக்கு முன்பு தனது டென்மார்க் அரசக் குடும்ப பட்டத்தை துறந்துவிட்டார் பிலிப். ஆனாலும், தனது முன்னோர்களின் பெயரான மவுன்ட்பேட்டன் பெயரை புனைபெயராக வைத்துக்கொண்டார்.
திருமணத்துக்கு பின்பும் ராணுவத்தில் பணியாற்றிய பிலிப், 1952ல் ராணியாக எலிசபெத் மூடிசூடப்பட்ட பின் வேலையை உதறினார். ராணி எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதிக்கு சார்லஸ், ஆனே, ஆன்ட்ரூ, எட்வர்ட் என 4 குழந்தைகளும், 8 பேரக் குழந்தைகளும், 9 கொள்ளுப்பேரக் குழந்தைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
1952ல் எலிசபெத் அரியணையில் ஏறியபோது, இளவரசர் பிலிப் எப்போதும் அவருக்கு பின்னால் செல்ல வேண்டும் என்று அரசக் குடும்ப நெறிமுறைகள் கூறப்பட்டது. அப்போதில் இருந்து எலிசபெத் மகாராணியின் கணவராக வாழ்க்கையின் தடைகளை ஏற்றுக்கொள்ள பிலிப் போராடிய போதிலும், இறுதியில் அவர் தனக்கென முக்கிய இடத்தை செதுக்கி, அரசக் குடும்பத்தின் முதுகெலும்பாகக் காணப்பட்டார்.
பிலிப் வெளிப்படையாக பேசும் தன்மையைக் கொண்டவர். சில பார்வையாளர்கள் பிலிப்பின் வெளிப்படையான பேச்சு அரண்மனையில் அவரது சப்போர்டிங் ரோலை ஈடுசெய்யும் ஒரு வழியாகும் என்று பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஏராளமான சர்ச்சைகளையும் பிலிப் சந்தித்து இருக்கிறார். தவறுகளுக்கு பிலிப்பின் முனைப்பு எண்ணற்ற தலைப்புச் செய்திகளுக்கும் பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து உத்தியோகபூர்வ மன்னிப்புக்கும் வழிவகுத்தது.
உதாரணமாக, 1997 ஆம் ஆண்டில், அவர் அப்போதைய ஜெர்மன் அதிபர் ஹெல்முட் கோலை "ரீச்ஸ்கான்ஸ்லர்" என்று அழைத்தார் - இது அடோல்ப் ஹிட்லர் பயன்படுத்திய வார்த்தை. ஒரு முறை ராணியை காரிலிருந்து வெளியேற்றுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது, ஏனெனில் அவர் மிக வேகமாக வாகனம் ஓட்டுவதாக புகார் கூறினார்.
நகைச்சுவையாளர்!
சர்ச்சைகளைத் தாண்டி, சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர் பிலிப். ஒருமுறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அவர் ஒரு மனிதரை சந்தித்ததாக கூறப்படுகிறது: அப்போது,
"என் மனைவி தத்துவ மருத்துவர், என்னை விட மிக முக்கியமானவர்," என்று அந்த நபர் கூற, "ஆமாம், எங்கள் குடும்பத்திலும் எங்களுக்கு அந்த பிரச்சனை உள்ளது," என்று பிலிப் நகைச்சுவையாக பதில் கொடுத்துள்ளார்.
கடந்த 2017ல், தனது அரசப் பொறுப்புகளில் இருந்து இளவரசர் பிலிப் ஓய்வு வாங்கிக் கொண்டார். இதன்பின் பொது நிகழ்ச்சிகளில் அரிதாகவே கலந்து கொண்டவர், கடந்த சில மாதங்களாக இதயப் பிரச்சனை உள்ளிட்ட உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக லண்டன் கிங் எட்வர்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் தான் வீடு திரும்பினார்.
வருகிற ஜூன் 10ஆம் தேதி தான் இளவரசர் பிலிப்பின் 100ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட இருந்தது. இந்த நிலையில் இளவரசர் பிலிப் இயற்கையோடு கலந்துள்ள பக்கிங்ஹாம் அரண்மனையை தாண்டி இங்கிலாந்து முழுவதும் சோகத்தை ஏற்படுத்தயுள்ளது.