‘அரசக் குடும்பத்தால் எங்கள் குழந்தை இனவெறிக்கு ஆளானான்’ - ஹாரி - மேகன் சர்ச்சை இன்டெர்வீயூ!
மொத்த உலகத்திலும் தற்போது ஹாட் டாப்பிக் இது தான்!
இங்கிலாந்து அரச குடும்பப் பொறுப்பிலிருந்து விலகி இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறியவர்கள் இளவரசர் ஹாரி - மேகன் மார்க்கெல் தம்பதி.
இவர்கள் இருவரும் பிரபல அமெரிக்க தொலைகாட்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அப்போது இருவரும் அரசக் குடும்ப வாழ்க்கை தொடர்பாக விரிவாக பேசினர். இது தான் மொத்த உலகத்திலும் தற்போது ஹாட் டாப்பிக்காக மாறி இருக்கிறது.
அந்த பேட்டியில்,
“அரச குடும்பத்தினரால் தான் நிறவெறியுடன் நடத்தப்பட்டேன். இதனால் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு தள்ளப்பட்டேன். குழந்தை பிறக்கும் வரை நான் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேர்ந்தது. எனக்கு நேர்ந்ததை விவரிக்க இயலாது,” என்றார் மேகன்.
குழந்தை பிறந்த பிறகு எங்களது மகன் ஆர்ச்சி நிறம் குறித்து அரச குடும்பம் கவலை கொண்டிருந்தது. குழந்தைக்கு எந்தவித அரசக் குடும்ப பாதுகாப்பும் கிடைக்கக் கூடாது என்பதில் அவர்கள் அனைவரும் கவனமாக இருந்தனர். அது எங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.
”பொருளாதார ரீதியாகவும் நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம். அதனால் தான் அரசக் குடும்பத்தை விட்டு வெளியேறினோம்,” என்று விரிவாக பேசியிருந்தனர்.
இந்த ஒற்றை பேட்டி தான் உலக அரங்கில் விவாத பொருளாக மாறியிருக்கிறது. குறிப்பாக அரச குடும்பத்தின் நிறவெறி சர்ச்சையாக மாறி இருக்கிறது.
இது தொடர்பாக அரசக் குடும்பம் சார்பில் எந்தப் பதிலும் கொடுக்கப்படவில்லை என்றாலும், இங்கிலாந்து ராணி மற்றும் அவரது கணவர் பிலிப், இந்த இனவெறி குறித்து பேசவில்லை என்றும், அரசக் குடும்பத்தை சேர்ந்த சிலர் வெளிப்படுத்திய இந்த கருத்து யாருடையது என்று இளவரசர் ஹாரி சொல்ல மர்றுத்துவிட்டார் என்று ஓப்ரா வின்ஃப்ரே தெளிவுப்படுத்தினார்.
இதற்கிடையே, அமெரிக்க வெள்ளை மாளிகை இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது.
"எவரும் முன்வந்து மனநலத்துடன் தங்கள் சொந்த போராட்டங்களைப் பற்றி பேசுவதற்கும் அவர்களின் சொந்தக் கதையைச் சொல்வதற்கும் தைரியம் தேவை," என்று ஜனாதிபதி ஜோ பைடனின் பத்திரிகையாளர் செயலாளர் ஜென் சாகி செய்தியாளர்களிடம் கூறினார்.
எவ்வாறாயினும், இரண்டு ராயல்களும் இப்போது ‘தனி குடிமக்கள்’ என்றும் ஜனாதிபதியின் சார்பாக நாங்கள் இங்கிருந்து கூடுதலாக எதுவும் சொல்லப் போவதில்லை. நாங்கள் பிரிட்டிஷ் மக்களுடன் ஒரு வலுவான மற்றும் நிலையான உறவைக் கொண்டுள்ளோம், மேலும் பல விஷயங்களில் ஐக்கிய இராச்சிய அரசாங்கத்துடன் ஒரு சிறப்புக் கூட்டாண்மை உள்ளது, அது தொடரும்," என்றும் சாகி கூறியிருக்கிறார்.