Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

மோசடி கடன் ஆப்'களை தடுக்க அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் கடன் செயலிகளின் பொது களஞ்சியம் - அறிமுகம் செய்யும் ஆர்பிஐ!

ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகளின் பொது களஞ்சியத்தை உருவாக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது

மோசடி கடன் ஆப்'களை தடுக்க அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் கடன் செயலிகளின் பொது களஞ்சியம் - அறிமுகம் செய்யும் ஆர்பிஐ!

Friday August 09, 2024 , 2 min Read

கடன் வழங்கும் மோசடி செயலிகளினால் எழும் சிக்கல்களைத் தடுக்க, அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகளின் பொது களஞ்சியத்தை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் வியாழன் அன்று நிதிக் கொள்கை கூட்டத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக தாஸ் கூறும்போது,

“அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகளின் சிக்கல்களிலிருந்தும் மோசடிகளிலிருந்தும் விடுபட ஒரு ஒழுங்கான அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் கடன் வழங்கும் சூழலமைவை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகளின் பொது களஞ்சியத்தை உருவாக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது,” என்றார்.

அங்கீகரிக்கப்பட்ட டிஜிட்டல் கடன் வழங்குநர்களின் சேவைகள் என்னென்ன என்பது இந்தப் பொதுக் களஞ்சியத்தில் இருக்கும். 2022 ஆம் ஆண்டில், RBI இந்திய அரசுடன் முறையான கடன் வழங்கும் செயலிகளின் அனுமதிப் பட்டியலைப் பகிர்ந்து கொண்டது. இந்தப் பட்டியலில் சேர்க்கப்படாத செயலிகளை Google Play Store போன்ற இயங்குதளங்களில் இருந்து அகற்றப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Reserve Bank of India, RBI

இந்த சட்டவிரோத செயலிகள் கடன்கள் மீதான வட்டியில் கொள்ளை அடிப்பதுடன் கடனை திரும்பப் பெற கையாளும் வழிமுறைகள் துன்புறுத்தல், மிரட்டல் என்று நெறியற்ற வழிகளைக் கடைப்பிடித்து வருகின்றன.

வாங்கியக் கடனை வசூலிக்க கடனாளிகளின் தனிப்பட்ட தரவுகளை உள்ளடக்கிய அச்சுறுத்தல்களான அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டுதல் போன்ற கொடுமைகளை கடனாளிகள் அனுபவித்து வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள மூன்றில் ஒரு பங்கு வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் இதில் விவரம் அறிந்து செயல்பட்டாலும், பெரும்பாலானோருக்கு டிஜிட்டல் கடன்கள் பற்றிய விவரங்கள் போதவில்லை. சட்டவிரோதமான கடன் வழங்கும் செயலிகளை இவர்களால் அடையாளம் காண முடியவில்லை என்பதே நிலவரம்.

நாட்டில் கடன் வழங்கும் டிஜிட்டல் தளங்கள் பெருகி வரும் நிலையில், வாடிக்கையாளர்கள் தெரியாமல் போய் வலையில் விழுவதைத் தடுக்க இப்போது அங்கீகரிக்கப்பட்ட, அல்லது அதிகாரபூர்வ டிஜிட்டல் கடன் வழங்குநர்களின் செயலிகளுக்கான பொதுக்களஞ்சியத்தை ஆர்பிஐ அறிமுகம் செய்வது பெரிய நிம்மதியை அளிக்கக் கூடியதாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.